Pages

Thursday, December 20, 2012

Daily 1 hymn of Thirumanthiram with Explanation-[hymn-117]


117.
சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரிய சந்நிதி யிற்சுடு மாறுபோல்
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே

பொருள் விளக்கம்
சூரிய ஒளியில் சூரிய காந்தக் கல் முன் வைத்த பஞ்சு பற்றி எறிவதைப் போல, வெறும் சூரிய காந்திக் கல்முன் பஞ்சை வைத்தான். அது எரியாது, அதாவது, பஞ்சு பற்றிக் கொள்ள முக்கியத் தேவை சூரிய ஒளி, சூரிய ஒளியிருந்தால் தான் அது சூரிய காந்தக் கல்லில் பட்டு வெப்பத்தை மிகச் செய்து பஞ்சைப் பற்றி எரியச் செய்யும். சூரிய ஒளி இல்லாமல் சூரிய காந்திக் கல் பஞ்சைப் பற்ற வைக்காது. அதுபோல் , அதாவது சூரியன் முன் சூரிய காந்திக் கல் பஞ்சைச் சுடுவது போல, ஞானாசிரியன் முன் தோன்றிய மாணவனின் மன மயக்கங்கள் அழிந்து போகும். ஆண்டவன் அருட்பார்வை உயிர்களின் அக இருளைப் போக்கும் என்பது பொருள். சூரியகாந்தம் என்பது சூரிய வெப்பத்தை மிகச் செய்யும் ஒரு கல்.

ENGLISH:
chUriya kANdhamum chUzhpanYchum pOlavE
chUriya kANdham chUzhpanYchaich chuttitA
chUriya chaNNithi yiRchutu mARupOl
chUriyan thORRamun aRRa malanGkaLE

MEANING:
Like the spark that within the bamboo indwells,
So, Nandi Lord, from this body-temple flamed;
With sweet compassion gentler than a mother's,
He shattered the Impurities Three
And like unto the sun on the ocean of mercy arose.