Pages

Sunday, December 23, 2012

Daily 1 hymn of Thirumanthiram with Explanation-[hymn-120]


120:
ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்
தீமேவு பல்கர ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே.

பொருள் விளக்கம்
--------------------------
ஆ- பசு, மேவு - மேவிய. இங்கு தருகின்ற எனப் பொருள் கொள்ளலாம். பசுவின் பாலை நீரோடு கலந்து வைத்தால் அன்னப் பறவையானது பாலையும் நீரையும் வேறு வேறாக்கி, அதாவது, நீரை விட்டுவிட்டுப் பாலை மட்டும் பருகும் என்பர். இதுபொல இறைவன் அவனே. சிட்றம்பலம், பேரம்பலம், பொன்னம்பலம் என்ற அம்பலங்களில் ஆனந்தக் கூத்தை நிகழ்த்துவதொடு, ஆன்மாக்கள் உயிரோடும் ஒன்றியிருக்கின்றான். என்றாலும், இந்த ஆன்மா அழுக்க்டைய (மலம் சேர), தீமையான (தீமேவு) பலவகைக் காரணங்கள் (பல் கரணங்கள்) ஆன்மாக்களைச் சேருகேன்றண (உற்றன). இவையே உயிர்கள் தொடரும் ஏழ்பிறவிக்கும் காரணம் ஆகின்றன. இறைவன் அருள் இருந்தால் போதும், பிரவித் துயருக்குக் காரணமான் மல்ங்கள் வினைத் தொடர்புகள், நெருப்புப் பற்றிய விதை (வித்து) போலக் கரிந்து போகும். மரத்துக்கு மூலம் விதை. எனவே வினைத் தொடர்பை ‘வித்து’ என்றார்.

ENGLISH
----------
AmEvu pAlnIr pirikkinRa annampOl
thAmE thanimanRil thannan thaniniththan
thImEvu palkara NaNkaLuL uRRana
thAmEz piRapperi chArn^dhavith thAmE

MEANING
-----------
Like unto the swan that from milk the water parts,
So the Lord, Himself, alone, in this Sabha unique,
Grasped the senses many that scorch like fire,
And thus the Seven Births unto roasted seeds rendered.