Pages

Monday, December 24, 2012

Daily 1 hymn of Thirumanthiram with Explanation-[hymn-121]

121: வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே.

பொருள் விளக்கம்
-----------------
வித்து - விதை. இங்கே பிறவிகள் தொடர்வதற்கான வினைப் பயன்கள், பிறவித்துயருக்குக் காரணமான பாசப் பிணைப்புகளை விட்டு விட்டு, குரு உபதேசமாகச் சொன்ன மந்திர மொழியை மனதுள் சொல்லச் சொல்லச், மேலான தன்னை மறந்த யோக நிலை சித்திக்கும், அந்த நிலை பிறவித் தொடர் அறுக்கும் புனித நிலை, இந்த நிலை அடைந்தவர்கள், உடலொடும் உயிரோடும் ஐம்புல அறிவும் ஒன்றாகிச் செத்தவர்களைப் போல இருப்பார்கள். இவர்களே சிவயோகிகள் எனப்படுவர். வியாக்கிரதம் - உபதேசம், துரியம்-தன்னை மறக்கும் யோக நிலை, துடக்கறச்-தொடக்கம், தோற்றம் அழிய, செத்திட்டு - உலகப் பற்றற்று.

Romanized
----------
vittaik keṭuttu viyākkirat tēmikac
cuttat turiyam piṟantu tuṭakkaṟa
ottup pulaṉuyir oṉṟāy uṭampoṭu
cettiṭ ṭiruppār civayōki yārkaḷē.

MEANING-[Sivayogins Attain Turiya State in Mortal Body]
---------------------------------------------------------
Sivayogins are they that the seed destroy,
Who, in waking state, the pure awareness induce;
Who in harmony unbroken, achieve the tranced breath,
When life, senses, body--alike simulate death.