Pages

Wednesday, October 9, 2013

திருக்குறள் 250 - துறவறவியல்

10. வலியார்முன் தன்னை நினைக்க,தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.








பொருள்:

(அருள் இல்லாதவன்) தன்னைவிட மெலிந்தவர்மேல் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும். - மு.வரதராசனார் உரை


வலியார் முன் தன்னை நினைக்க - தன்னின் வலியார் தன்னை நலிய வரும்பொழுது அவர்முன் தான் அஞ்சிநிற்கும் நிலையினை நினைக்க, தான் தன்னின்மெலியார்மேல் செல்லுமிடத்து - அருளில்லாதவன் தன்னின் எளியார்மேல் தான் நலியச் செல்லும் பொழுது. ('மெலியார்' எனச் சிறப்புடைய உயர்திணைமேல் கூறினாராயினும், ஏனைய அஃறிணையும் கொள்ளப்படும். அதனை நினைக்கவே, இவ்வுயிர்க்கும் அவ்வாறே அச்சம் ஆம் என்று அறிந்து, அதன்மேல் அருள் உடையன் ஆம் என்பது கருத்து. இதனால் அருள் பிறத்தற்கு உபாயம் கூறப்பட்டது.)  - பரிமேலழகர் உரை

Tuesday, October 8, 2013

திருக்குறள் 249 - துறவறவியல்

9. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செயயும் அறம்.








பொருள்:

அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.. - மு.வரதராசனார் உரை


அருளாதான் செய்யும் அறம் தேரின் - உயிர்கள் மாட்டு அருள் செய்யாதவன் செய்யும் அறத்தை ஆராயின், தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்று - ஞானம் இல்லாதவன். ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும். (மெய்ப்பொருள் - மெய்ந்நூலில் சொல்லும் பொருள். நிலை பெற்ற ஞானம் இல்லாதவன் இடையே மெய்ப்பொருளை உணர்ந்தால் அதனைத் தன்ஞானம் இலாமையால் தானே அழித்துவிடும் : அது போல அருளாதான் இடையே அறஞ்செய்தால் அதனைத் தன் அருளாமையால் தானே அழித்து விடும் என்பது ஆயிற்று: ஆகவே, பிற அறங்கட்கெல்லாம் அருள் உடைமை மூலம் என்பது பெற்றாம். இவை நான்கு பாட்டானும் அத்துணை இல்லாதார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.) - பரிமேலழகர் உரை

Monday, October 7, 2013

திருக்குறள் 248 - துறவறவியல்

8. பொருள்அற்றார் பூப்பர் ஒருகால் அருள்அற்றார்
அற்றார்மற்று ஆதல் அரிது.








பொருள்:

பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர்; அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயன் அற்றவரே; அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை. - மு.வரதராசனார் உரை


பொருள் அற்றார் ஒருகால்பூப்பர்- ஊழான் வறியராயினார் அது நீங்கிப் பின் ஒரு காலத்துச் செல்வத்தால் பொலிவர், அருள் அற்றார் அற்றார் மற்று ஆதல் அரிது - அவ்வாறு அன்றி அருளிலாதார் பாவம் அறாமையின் அழிந்தாரே; பின் ஒருகாலத்தும் ஆதல் இல்லை. ( 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது, மேல் பொருள் இன்மையொடு ஒருவாற்றான் ஒப்புமை கூறினார் ஆகலின், அது மறுத்து, பிற ஆற்றான் அதனினும் கொடியது என்பது கூறியவாறு.) - பரிமேலழகர் உரை

Sunday, October 6, 2013

திருக்குறள் 247 - துறவறவியல்

7. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.








பொருள்:

பொருள் இலாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறுபோல, உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம். - மு.வரதராசனார் உரை


அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - உயிர்கள்மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு - பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல. ( 'அவ்வுலகம், இவ்வுலகம்' என்பன ஆகுபெயர். இவ்வுலகத்து இன்பங்கட்குப் பொருள் காரணமானாற்போல அவ்வுலகத்து இன்பங்கட்கு அருள் காரணம் என்பதாயிற்று.) - பரிமேலழகர் உரை

Saturday, October 5, 2013

திருக்குறள் 246 - துறவறவியல்

6. பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்துஒழுகு வார்.








பொருள்:

அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பர்.. - மு.வரதராசனார் உரை


அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் - உயிர்கள் மாட்டுச் செய்யப்படும் அருளைத் தவிர்ந்து தவிரப்படும் கொடுமைகளைச் செய்து ஒழுகுவாரை, பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் - முன்னும் உறுதிப்பொருளைச் செய்யாது தாம் துன்புறுகின்றமையை மறந்தவர் என்று சொல்லுவர் நல்லோர். (உறுதிப்பொருள்: அறம், 'துன்புறுதல்' - பிறவித்துன்பம் மூன்றனையும் அனுபவித்தல். மறந்திலராயின், அவ்வாறு ஒழுகார் என்பது கருத்து.) - பரிமேலழகர் உரை

Friday, October 4, 2013

திருக்குறள் 245 - துறவறவியல்

5. அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி.








பொருள்:

அருளுடையவராக வாழ்கின்றவர்க்குத் துன்பம் இல்லை; காற்று இயங்குகின்ற வளம் பொருந்திய பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.. - மு.வரதராசனார் உரை


அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை - அருளுடையார்க்கு இம்மையினும் ஒரு துன்பம் உண்டாகாது, வளி வழங்கும் மல்லல்மா ஞாலம் கரி - அதற்குக் காற்று இயங்குகின்ற வளப்பத்தை உடைய பெரிய ஞாலத்து வாழ்வார் சான்று. ( சான்று ஆவார் தாம் கண்டு தேறிய பொருளைக் காணாதார்க்குத் தேற்றுதற்கு உரியவர். அருள் ஆள்வார்க்கு அல்லல் உண்டாக ஒரு காலத்தும் ஒருவரும் கண்டறிவார் இன்மையின், இன்மை முகத்தான் ஞாலத்தார் யாவரும் சான்று என்பார். 'வளி வழங்கும் மல்லல் மாஞாலம் கரி' என்றார். எனவே, இம்மைக்கண் என்பது பெற்றாம். 'ஞாலம்' ஆகு பெயர். இவை மூன்று பாட்டானும் அத்துணையுடையார்க்கு இருமையினும் துன்பம் இல்லாமை கூறப்பட்டது.) - பரிமேலழகர் உரை

Tuesday, September 24, 2013

திருக்குறள் 244 - துறவறவியல்

4. மன்னுயிர் ஓம்பி அருள்ஆள்வாற்கு இல்லென்ப
தன்உயிர் அஞ்சும் வினை.








பொருள்:

தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை. - மு.வரதராசனார் உரை


மன்உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு - நிலைபேறுடைய உயிர்களைப் பேணி அவற்றின்கண் அருளுடையன் ஆவானுக்கு, தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப - தன் உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிந்தோர். (உயிர்கள் எல்லாம் நித்தம் ஆகலின், 'மன் உயிர்' என்றார். அஞ்சுதல்- துன்பம் நோக்கி அஞ்சுதல். அன்ன அறத்தினோன் கொலை முதலிய பாவங்கள் செய்யான் எனவே மறுமைக்கண் நரகம் புகாமைக்கு ஏது கூறியவாறாயிற்று.) - பரிமேலழகர் உரை


Monday, September 23, 2013

திருக்குறள் 243 - துறவறவியல்

3. அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.






பொருள்:
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை. - மு.வரதராசனார் உரை



இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல், அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை. ('இருள் செறிந்த துன்ப உலகம்' என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன் கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை, அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், 'உலகம்' எனப்பட்டது.) - பரிமேலழகர் உரை

Sunday, September 22, 2013

திருக்குறள் 242 - துறவறவியல்

25. அருளுடைமை

2. நல்லாற்றான் நாடி அருளாள்க: பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை.






பொருள்:


நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும். பல வழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக உள்ளது. - மு.வரதராசனார் உரை


நல் ஆற்றான் நாடிஅருள் ஆள்க - அளவைகளானும் பொருந்து மாற்றானும் நன்றான நெறியிலே நின்று, நமக்குத் துணையாம் அறம் யாது? என்று ஆராய்ந்து, அருளுடையராக, பல் ஆற்றான் தேரினும் துணை அஃதே - ஒன்றையொன்று ஒவ்வாத சமய நெறிகள் எல்லாவற்றானும் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே, பிறிது இல்லை. (அளவைகளாவன: பொறிகளான் காணும் காட்சியும், குறிகளான் உய்த்துணரும் அனுமானமும், கருத்தா மொழி ஆகிய ஆகமமும் என மூன்று. ஒப்புப்பற்றி உணரும் உவமையும், இங்ஙனம் அன்றாயின் இது கூடாது என்று உணரும் அருத்தாபத்தியும், உண்மைக்கு மாறாயஇன்மையும் என இவற்றைக் கூட்டி, ஆறு என்பாரும் உளர். இவையும் ஒரு ஆற்றான் அவற்றுள்ளே அடங்குதலின் மூன்று என்றலே கருத்து. பொருந்தும் ஆறாவது, 'இது கூடும் , இது கூடாது' எனத் தன் கண்ணே தோன்றுவது. இதனை வடநூலார் 'உத்தி' என்ப. 'ஆற்றான்' என்பது வேற்றுமை மயக்கம். ஒன்றை ஒன்று ஒவ்வாமையாவது மத வேறுபாட்டான் அளவைகளும் பொருள்களும் தம்முள் மாறுகோடல்; அன்னவாயினும், அருள் துணை என்றற்கண் ஒக்கும் என்பதாம். உயிரை விட்டு நீங்காது இருமையினும் உதவலின், 'துணை' என்றார். இவை இரண்டு பாட்டானும் அருளினது சிறப்புக் கூறப்பட்டது.) - பரிமேலழகர் உரை

Saturday, September 21, 2013

திருக்குறள் 241 - துறவறவியல்

25. அருளுடைமை

1. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்: பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.





பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டும் உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும். - மு.வரதராசனார் உரை


 செல்வத்துள் செல்வம் அருட்செல்வம் - செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வமாவது அருளான்வரும் செல்வம், பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள - அஃது ஒழிந்த பொருளான் வரும்செல்வங்கள் இழிந்தார்கண்ணும் உளவாம் ஆகலான். ( அருளான் வரும் செல்வமாவது, உயிர்களை ஓம்பி அவ்வறத்தான் மேம்படுதல். உயர்ந்தார்கண்ணே அல்லது இல்லாத அருட்செல்வமே சிறப்புடைய செல்வம், ஏனை நீசர்கண்ணும் உளவாம்பொருட் செல்வங்கள் சிறப்பு இல என்பதாம்.) - பரிமேலழகர் உரை

Monday, September 16, 2013

[hymn 231] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

அந்தணர் ஒழுக்கம் - DHARMA OF ANTHANAN

231:
நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.




பொழிப்புரை
-------------
முப்புரிநூலை விடாது அணிகின்ற அந்தணர்களே, ஆராய்ந்து சொல்லின், நீவிர் கொண்டுள்ள முப்புரி நூலும், குடுமியுமே பிரமமாகிவிடுமோ! நூல் பஞ்சும், சிகை மயிருமேயாம். உண்மையைச் சொல்லுமிடத்து, நூலாவது வேதத்தின் ஞானகாண்டச் செய்யுட்களே. நுண்ணிய சிகையாவது, அச் செய்யுட்களின் பொருள் தெளிவே; இதனை அறிந்துகொள்ளுங்கள்.

Romanized
------------
nūluñ cikaiyum nuvaliṟ piramamō
nūlatu kārppāca nuṇcikai kēcamām
nūlatu vētāntam nuṇcikai ñāṉamām
nūluṭai antaṇar kāṇum nuvalilē.


reference:
http://www.thevaaram.org/

Wednesday, September 11, 2013

[hymn 230] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

அந்தணர் ஒழுக்கம் - DHARMA OF ANTHANAN

230:
வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தங் கேட்டவர் வேட்கைவிட் டாரே.


பொழிப்புரை
-------------
வேதத்தின் முடிந்த பொருள் ஆசையற்ற நிலையே யாம். அதனால், அப்பொருளை உணர்ந்தவர் ஆசையற்று நின்றார்கள். ஆயினும் சிலர் அப்பொருளை உணர விரும்பி உணர்த்து வாரை அடைந்து உணர்ந்தும், தம் ஆசையை விட்டாரில்லை.

Romanized
------------
vētāntaṅ kēṭka virumpiya vētiyar
vētāntaṅ kēṭṭuntam vēṭkai oḻintilar
vētānta māvatu vēṭkai oḻintiṭam
vētāntaṅ kēṭṭavar vēṭkaiviṭ ṭārē.


reference:
http://www.thevaaram.org/

Saturday, September 7, 2013

[hymn 229] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

அந்தணர் ஒழுக்கம் - DHARMA OF ANTHANAN

229:
சத்திய முந்தவம் தான்அவன் ஆதலும்
எய்த்தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்உடன் உண்மை யுணர்வுற்றுப்
பெத்தம் அறுத்தலு மாகும் பிரமமே.

பொழிப்புரை
-------------
`பிரமஞானம்` என்பது, பக்குவம் எய்திய உயிர்கள், பொய்கூறாமையும், புலால் உண்ணாமை, கொல்லாமை, இன்னா செய்யாமை ஆகிய நோன்புகளும், தம் வழி நிறுத்தத் தக்க தாகிய மனத்தை அவ்வாறே பொறிவழிப் போகாது தடுத்து நிறுத்தலும், யோக சமாதியும் என்னும் இவை கைவரப்பெற்றுப் பின்னர் மெய் உணர்வெய்திப் பாசத்தை முற்ற அறுத்தலாகும்.

Romanized
------------
cattiya muntavam tāṉavaṉ ātalum
eyttakum intiyam īṭṭiyē vāṭṭalum
otta uyiruṭaṉ uṇmai yuṇarvuṟṟup
pettam aṟuttalu mākum piramamē.

Meaning
----------
The Truth,
penance,
the realization that He and we are one,
Intense control of the senses and Getting rid of the body-mind complex— These help to attain the Brahmic state.
Translation: B. Natarajan (2000)


reference:
http://www.thevaaram.org/

Friday, September 6, 2013

[hymn 228] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

அந்தணர் ஒழுக்கம் - DHARMA OF ANTHANAN

228:
பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறி யான திருக்கை யிருத்திச்
சொருபம தானோர் துகளில்பார்ப் பாரே.

பொழிப்புரை
-------------
பலநெறிகளையும் அடக்கிநிற்கும் பெருநெறியை உணர்த்தும் பிரணவ மந்திரத்தின் பொருளைச் சிந்தித்து, அருள் ஆசிரியர்தம் அருளுரையால், முடிந்த பொருளை உணர்ந்து, நான் காகிய வேதத்திற் சொல்லப்பட்ட முத்திநெறியாகிய திருவருட்குத் தம்மைக் கொடுத்து, அத்திருவருட்கு முதலாகிய சிவத்தின் உண்மை நிலையைத் தலைப்பட்டவரே குற்றம் அற்ற அந்தணராவர்.

Romanized
------------
peruneṟi yāṉa piraṇavam ōrntu
kuruneṟi yālurai kūṭināl vētat
tiruneṟi yāṉa tirukkai yiruttic
corupama tāṉōr tukaḷilpārp pārē.

Meaning -[They Attain the Manifestness State of God]
--------------------------------------------------------------
Deep they pondered on Pranava's great holy way,
By Guru's grace inspired recited the mystic lay,
The rituals performed by the four Vedas prescribed,
And thus attained pure, pristine Manifestness.

reference:
http://www.thevaaram.org/

[hymn 227] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

அந்தணர் ஒழுக்கம் - DHARMA OF ANTHANAN

227:
காயத் திரியே கருதுசா வித்திரி
ஆய்தற் குவப்பர் மந்திரமாங் குன்னி
நேயத்தே ரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே.

பொழிப்புரை
-------------
அன்பாகிய ஊர்தியின்மேல் சென்று முதற் பொருளை அடைந்து அதுவேயாய் அழுந்திநின்று உலகத்தில் பற்றற்று நிற்பவரே, அந்தணர்க்கும் உண்மை காயத்திரி, சாவித்திரி முதலாகச் சொல்லப்படுகின்ற ஞான சத்திகளின் வேறுபாட்டியல் புகளை எல்லாம் அவற்றிற்குரிய மந்திரங்களை நெஞ்சிற் பதித்து ஓர்தற்கு விரும்புவர்.

Romanized
------------
kāyat tiriyē karutucā vittiri
āytaṟ kuvappar mantiramāṅ kuṉṉi
nēyattē rēṟi niṉaivuṟṟu nēyattāy
māyattuḷ tōyā maṟaiyōrkaḷ tāmē.
reference:
http://www.thevaaram.org/

Tuesday, August 13, 2013

[hymn 224] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

அக்கினி காரியம் - RELATING TO SACRIFICIAL FIRE

224:
அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணந்
தங்கி இருக்கும் தகையருள்செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழது வாமே.

பொழிப்புரை
-------------
வேள்வியை ஒழியாது வேட்கும் அந்தணர், வேத வழக்கு இவ்வுலகில் அழிந்தொழியாதவாறு காப்பவராவார். அவ்வேள்வியை எங்கும் நிகழச் செய்யுமாற்றால் அவர்க்கு மெய் வருத்தம் பெரிதாயினும், இவ்வுலகில் எங்கும் மிக்கு விளங்குமாறு அவர் நிலைநாட்டும் புகழ் அச்செயலேயாம்.

Romanized
------------
aṅki niṟuttum aruntavar āraṇan
taṅki irukkum takaiyaruḷceytavar
eṅkum niṟutti iḷaippap perumpati
poṅki niṟuttum pukaḻatu vāmē.

Meaning-[Sacrificial Flame is Undying]
------------------------------------------
In true penance striving, to Vedic rites conforming
They, who everywhere raise the sacrificial flame,
Tireless, unsparing in kindling the Holy Fire--
Theirs the true flame eternal, theirs the undying name.

reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"

Monday, August 12, 2013

[hymn 223] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


அக்கினி காரியம் - RELATING TO SACRIFICIAL FIRE

223:
ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்இறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத் துளங்கிக் குரைகடல் தானே.

பொழிப்புரை
-------------
வேள்வித் தீக்கு உள்ளீடாய் நிற்பவன் எங்கள் சிவபெருமானே; அஃது, அவன் சுடுகாட்டில் தீயில் நின்று ஆடி, சிறந்த உயிரைத் தாங்கி நிற்றலானே அறியப்படும். இவ்வுண்மையை உணராது, உணர்த்துவாரையும் வெகுள்வாரது வெகுளியின்கண் உளதாகின்ற தீயால் விளையும் வினைக்கடல், மந்தரமாகிய பெரிய மத்தால் கலங்கி ஒலித்த கடல் போல்வதாம்.

Romanized
------------
ōmattuḷ aṅkiyiṉ uḷḷuḷaṉ emiṟai
īmattuḷ aṅki irataṅkoḷ vāṉuḷaṉ
vēmattuḷ aṅki viḷaivu viṉaikkaṭal
kōmat tuḷaṅkik kuraikaṭal tāṉē.

Meaning-[He is the Fire Within All Fires]
------------------------------------------
Inside the Fire of the Homa is my Lord,
Inside too is He seated in the flame of the funeral pyre;
The Fire of Homa which scorches Karma's surging sea,
The Fire, that the mighty Churner in the sea begot, still abides.

reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"

Tuesday, July 30, 2013

[hymn 217] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

நல்குரவு - IN VAIN PURSUIT OF ACCUMULATION

217:
அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான
இணைதுணை யாமத் தியங்கும் பொழுது
துணையணை யாயதோர் தூய்நெறி யாமே.

பொழிப்புரை
-------------
உயிர்கட்குப் பொருந்திய துணை அந்தணர் வளர்க் கின்ற தீயினுள் தீயாய் இருக்கும் இறைவனே. ஆகவே, தீ வேட்டு அதன் உள்ளீடான இறைவனாகிய அருந்துணையுடன் உலகியலில் ஒழுகும் பொழுதே உயிர் தான் செல்கதிக்குத் துணையாய மெய்ப் பொருளை அடைந்து நிற்றலாகிய நன்னெறியைத் தலைப்படுதல் உண்டாவதாகும்.

Romanized
------------
aṇaituṇai antaṇar aṅkiyuḷ aṅki
aṇaituṇai vaittatiṉ uṭporu ḷāṉa
iṇaituṇai yāmat tiyaṅkum poḻutu
tuṇaiyaṇai yāyatōr tūyneṟi yāmē.

Meaning-[Sacrifices Lead to Heaven]
------------------------------------------
They who invoke our Lord--the Fire within the Fire,
The Brahmins true are they and our goodly support;
Who, night and day, raise the Sacrificial flame
Guiding us along the pure Path to our heavenly port.

reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"

Friday, July 26, 2013

[hymn 216] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

அக்கினி காரியம் - RELATING TO SACRIFICIAL FIRE

216:
ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத் துண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாமறி வாலே தலைப்பட்ட வாறே.

பொழிப்புரை
-------------
முத்தீ வேள்வி செய்கின்ற, அரிய வேதத்தை ஓது கின்ற அந்தணர், மறுமை நலம் வேண்டி, பிறர்க்கும், பிறவுயிர்க்கும் இட்டுண்பர். இனி, அவர் அவ்வேத விதியானே அடைய விரும்பும் வீட்டு நெறி, அவரவர் அறிவின் எல்லைக்கேற்ப அடைதலாகவே முடியும்.

Romanized
------------
ākuti vēṭkum arumaṟai antaṇar
pōkati nāṭip puṟaṅkoṭut tuṇṇuvar
tāmviti vēṇṭit talaippaṭu meynneṟi
tāmaṟi vālē talaippaṭṭa vāṟē.

Meaning-[They Give Before They Eat]
------------------------------------------
The antanan who holy sacrifices perform,
On Salvation intent, give before they eat;
Even as in knowledge true, supreme they stand,
So in conduct they lead--to the One Goal headed straight.


reference:
http://www.thevaaram.org/

Saturday, July 13, 2013

[hymn 214] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

நல்குரவு - IN VAIN PURSUIT OF ACCUMULATION

214:
அறுத்தன ஆறினும் ஆனின மேவி
இறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றேனே.

பொழிப்புரை
-------------
ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர்காறும் செல்ல வரையறுக்கப்பட்ட எழுவகைப் பிறவிகளிலும் உள்ள உயிர்களாகிய பசுக்கூட்டத்தில் ஐம்புல வேடர் புகுந்து தங்கினர். அவர்களால் அப்பசுக்களை அளவற்ற துன்பங்கள் வருத்தின. இவற்றிற்குக் காரணமான வினைகளோ ஒன்றல்ல; பல. (இவற்றை யெல்லாம் நோக்கி) நான் யாதோருடம்போடும் கூடி வாழ விரும்பாமல், சிவபெருமான் ஒருவனையே விரும்பி நிற்கின்றேன்.

Romanized
------------
aṟuttaṉa āṟiṉum āṉiṉa mēvi
iṟuttaṉar aivarum eṇṇili tuṉpam
oṟuttaṉa valviṉai oṉṟalla vāḻvai
veṟuttaṉaṉ īcaṉai vēṇṭiniṉ ṟēṉē.

Meaning-[Lord Alone is Refuge from Harrying Births]
------------------------------------------
Him the Six harried, Passion's form assuming,
Him the Five maligned, countless miseries giving,
Him Karma tortured through birth after birth pursuing--
Thus he learned to despise life--in the Lord alone refuge finding.

reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"

Tuesday, July 9, 2013

[hymn 213] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

நல்குரவு - IN VAIN PURSUIT OF ACCUMULATION

213:
தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய
கடந்ததோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொரு காலத் துணர்விளக் கேற்றித்
தொடர்ந்துநின் றவ்வழி தூர்க்கலு மாமே.

பொழிப்புரை
-------------
புதிய வினைகள் பலவற்றைச் செய்யத் தூண்டுதலால், `ஒருவரைப் பற்றி மற்றொருவர், அவரைப் பற்றி வேறொருவர்` என்று இவ்வாறு தொடர்ந்துவரும் சுற்றத்தார் பழ வினையினும் பார்க்கக் கொடியோரே. அதனால், அவரைப் புறந் தருதலில் தனது நாள் பல வற்றைக் கடந்துவிட்ட ஓர் உயிர், அந்நாளை முற்றக் கடந்தொழிவ தற்கு முன்னே என்றாயினும் ஒருநாளில் அச்சுற்றத்தை வெறுத்து மெய்யுணர்வாகிய விளக்கை ஏற்றினால், அவ்விளக்கொளியைப் பற்றிச் சென்று, பின்னும் அவர்களோடு கூடி வாழும் நாள் வரும் வழியை அடைத்தலும் கூடுவதாம்.

Romanized
------------
toṭarnteḻu cuṟṟam viṉaiyiṉun tīya
kaṭantatōr āvi kaḻivataṉ muṉṉē
uṭantoru kālat tuṇarviḷak kēṟṟit
toṭarntuniṉ ṟavvaḻi tūrkkalu māmē.

Meaning-[Light of Wisdom's Lamp in Good Time]
------------------------------------------
Our kith and kin, unrelenting, like Karma stern,
Unrelaxing us pursue; so, ere life from body goes,
In good time, light thou Wisdom's lamp,
And intent thus, to that new-lit track, keep close.

reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"

Sunday, July 7, 2013

[hymn 212] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

நல்குரவு - IN VAIN PURSUIT OF ACCUMULATION

212:
கற்குழி தூரக் கனகமுந் தேடுவர்
அக்குழி தூர்க்கையா வர்க்கும் அரியதே
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே.

பொழிப்புரை
-------------
மக்கள் அன்னமே (சோறே) யன்றிச் சொன்னமும் (பொன்னும்) தேடுதல், இயல்பாகவே தூர்ந்து போவதாகிய மட்குழிபோலாது, தூர்க்கினும் தூராத கற்குழி போன்ற வயிற்றை நிரப்புதற்கேயாம். ஆயினும், அப்பொன்னை நிரம்பக் குவித்து வைத்தவர்க்கும் வயிற்றை நிரப்புதல் இயலாததே எனினும், அதனை நிரப்புதற்கு வழி ஒன்று உண்டு; அவ்வழியை அறிந்தால் உள்ளம் தூய்மைப்பட்டு வயிறும் நிரம்பும்.

Romanized
------------
kaṟkuḻi tūrak kaṉakamun tēṭuvar
akkuḻi tūrkkaiyā varkkum ariyatē
akkuḻi tūrkkum aṟivai aṟintapiṉ
akkuḻi tūrum aḻukkaṟṟa vāṟē.

Meaning-[Seek not to Fill Stomach's Pit; Fill the Birth's Pit]
------------------------------------------
To fill the stomach's stony pit, they seek the precious gold;
But little do they know how hard it is to fill births' pit;
Only when true wisdom you attain that pit to rule,
Then that pit is filled, when life is washed clean and rendered fit.

reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"

Thursday, July 4, 2013

[hymn 210] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

நல்குரவு - IN VAIN PURSUIT OF ACCUMULATION

210:
புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட் டார்களும் அன்பில ரானார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே. 

பொழிப்புரை
-------------
ஒருவர்க்கு அவர் உடுத்திருக்கும் ஆடை கிழிந்த ஆடையாய் இருந்ததென்றால், அவரது வாழ்க்கையும் கிழிந்தொழிந் ததேயாம். ஏனெனில், தம்மால் தமக்குத் துணையெனத் தெளியப்பட்ட வரும் தம்மாட்டு அன்பிலாராகின்றனர். நாட்டில் நடைப் பிணமான அவர்க்கு எவரோடும் கொடுத்தல் கொள்ளல்கள் இல்லை; அதனால் அவர் இல்லத்தில் யாதொரு விழாவும் இல்லை; பிற உலக நடையும் இல்லை; ஆகையால்.

Romanized
------------
puṭaivai kiḻintatu pōyiṟṟu vāḻkkai
aṭaiyappaṭ ṭārkaḷum aṉpila rāṉār
koṭaiyillai kōḷillai koṇṭāṭṭa millai
naṭaiyillai nāṭṭil iyaṅkukiṉ ṟārkaṭkē.

Meaning-[Misery of Making a Living]
------------------------------------------
Garments to tatters torn, life a joyless desert becomes;
Loved ones and dear friends forsake, with no more love to spare;
Nothing more to give or ask, void of glory and pomp,
Neglected, like automatons they walk, sad and bare.

reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"

Wednesday, July 3, 2013

[hymn 209] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

209:
கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதக மாம்அவை நீக்கத்
தலையாம் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்
கிலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே.

பொழிப்புரை
-------------
`பிற உயிரைக் கொல்லுதல், பிறர் பொருளைக் களவு செய்தல், கள்ளுண்டல், நெறிநீங்கிய காமத்து அழுந்தல், பொய் கூறல்` என்னும் இவை ஐந்தும், `பேரறக் கடை - மாபாதகம்` என வேறு வைத்து எண்ணப்படும். ஆகவே, அவைகளை அறவே நீக்காதவழி மேற்கதி உண்டாகாது. சிவனடியை அடைந்து அவனது இன்பத்தைப் பெற்றவர்க்கு இவை உண்டாக வழியில்லை. அவனது அருள் இன்பத்தில் ஆழ்ந்திருத்தல் ஒன்றே அவர்க்கு உளதாம்.

Romanized
------------
kolaiyē kaḷavukaḷ kāmam poykūṟal
malaivāṉa pātaka māmavai nīkkat
talaiyām civaṉaṭi cārntiṉpañ cārntōrk
kilaiyām ivaiñāṉā ṉantat tiruttalē.

reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"

Friday, June 28, 2013

[hymn 208] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

208:
கோழை ஒழுக்கங் குளமூடு பாசியில்
ஆழ நடுவார் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைந்தவர் போகின்ற வாறே.

பொழிப்புரை
-------------
வீரம் இல்லாத ஒழுக்கத்தால் பொது மகளிர் மயக்கத்தில் ஆழநினைத்து அதன்பொருட்டுத் தம் பொருளை அளக் கின்ற பேதையரை அறிவுடையோர் இடித்து வரை நிறுத்தி விலக்குதல் வேண்டும். அவ்வாறு செய்யாவிடில், அவரது நிலைமை படுகுழியில் வீழ்ந்தவர் மீளமாட்டாது அழுந்தியொழிதல் போல்வதேயாம்.

Romanized
------------
kōḻai oḻukkaṅ kuḷamūṭu pāciyil
āḻa naṭuvār aḷappuṟu vārkaḷait
tāḻat tuṭakkit taṭukkakil lāviṭil
pūḻai nuḻaintavar pōkiṉṟa vāṟē.

Meaning-[Irretrievable Loss in Lust]
------------------------------------------
Those unfirm of mind who, in folly vain,
Struggle to plant seeds deep in moss-covered tank--
If such betimes we bind not and restrain,
Irretrievably lost are they in lust of sex, sordid and rank.

reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"

Thursday, June 27, 2013

[hymn 207] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

207:
வையகத் தேமட வாரொடுங் கூடியென்
மெய்யகத் தோருளம் வைத்த விதியது
கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்
மெய்யகத் தேபெறு வேம்பது வாமே.

பொழிப்புரை
-------------
நிலவுலகத்தில் வாழும்பொழுது மகளிரோடும் கூடிப்பெறுவது யாதும் இல்லை. ஆயினும், உடம்பொடு கூடி நிற்பாரது உள்ளத்தில் ஊழ் கூட்டிய ஒரு மயக்கமே அக்கூட்டத்தின்கண் உளதாய விருப்பம். இன்னும் அவ்விருப்பம், கையிலே கிடைத்த கருப்பஞ்சாறு போன்ற சிவானந்தத்தை உடைய மக்களுடம்பில் ஒருபக்கம் வைக்கப் பட்ட வேம்பு போல்வதுமாகும்.

Romanized
------------
vaiyakat tēmaṭa vāroṭuṅ kūṭiyeṉ
meyyakat tōruḷam vaitta vitiyatu
kaiyakat tēkarum pālaiyiṉ cāṟukoḷ
meyyakat tēpeṟu vēmpatu vāmē. 

Meaning-[Sweet Beginning, Bitter End]
------------------------------------------
"What are the joys that in woman's charms we seek or find?"
The truly wise of heart pronounce thus their course:
"In the hand like the sugary juice from crushing mills,
But in the body bitterer than bitterest neem."

reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"

Tuesday, June 25, 2013

[hymn 206] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

206:
இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயனுறப் புல்லிப் புணர்ந்தவர் எய்தும்
மயலுறும் வானவர் சார்விது என்பார்
அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே.

பொழிப்புரை
-------------
ஒருவனிடத்து நில்லாது பலரிடத்துச் செல்லு தலையே வாழ்க்கையாக உடைய பொது மகளிரது தோளை மிகத் தழுவிக் கலந்த ஆடவர், தாம்கொண்ட மயக்கத்தால், `நாம் அடையத் தக்க சுவர்க்க இன்பம் இதுவன்றி வேறில்லை` என்று கூறுவர். ஆயினும், அவர்தாமே அம்மகளிரைத் தமக்குச் சிறிதும் தொடர்பில் லாதவராகப் பேசி விலகி ஒழிவதைப் பார்க்கின்றோம்.

Romanized
------------
iyaluṟum vāḻkkai iḷampiṭi mātar
puyaṉuṟap pullip puṇarntavar eytum
mayaluṟum vāṉavar cārvitu eṉpār
ayaluṟap pēci akaṉṟoḻin tārē.

Meaning-[Lust Destroys]
------------------------------------------
Decoyed into passion's snare by tender woman's grace,
They fell into her arms and swooned in the warm embrace;
"This is life's crowning glory, fit for the gods to share--"
Thus speaking, they parted leaving not a trace.

reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"

Monday, June 24, 2013

[hymn 205] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

205:
மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போற் சுழித்துடன் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழும் இன்பம்
நனவது போலவும் நாடவொண் ணாதே. 

பொழிப்புரை
-------------
இல்லறநெறியில் நிற்கக் கருதுவார்க்குத் தம் மனைவியது இன்பத்தை நினைக்கும்பொழுது சுனையில் உள்ள நீர், மூழ்குவார்க்குத் தண்ணிதாய்த் தன்னினின்று மீளாதவாறு தன்னுள் ஆழ்த்திக்கொள்வதுபோல இருவர்க்கும் அரும்பெறல் இன்பமாய் அவரைப் பிரியாவகைச் செய்யும். அந்நெறியில் நிற்கக் கருதாத பிறர்க்குப் பொது மகளிர் இன்பம் கனவில் பெறும் இன்பம்போல அவர் தம் உள்ளத்தில் மட்டும் சிறிது அரும்பிப் பின் மறைந்தொழியும். அதனால், பொது மகளிரது இன்பத்தை உண்மை என்று நினைத்தலும் கூடாது.

Romanized
------------
maṉaipuku vārkaḷ maṉaiviyai nāṭil
cuṉaipuku nīrpōṟ cuḻittuṭaṉ vāṅkum
kaṉavatu pōlak kacinteḻum iṉpam
naṉavatu pōlavum nāṭavoṇ ṇātē. 

Meaning-[Incontinent Passion Spells Ruin]
------------------------------------------
The worldly folk who seek connubial delights
Are, like eddying water, sucked into whirling pool;
Such is passion, incontinent, fleeting as a dream;
Real it is not; let not its siren spell you befool.

reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"

Tuesday, June 18, 2013

[hymn 204] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

முதல் தந்திரம் - 12. மகளிர் இழிவு - EVIL WOMEN'S IGNOMINY

204:
இலைநல வாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே. 

பொழிப்புரை
-------------
இலை, தளிர் முதலியவற்றால் கண்ணைக் கவர்கின்ற எட்டிமரம், பின் பழம் பழுத்து அதனால் மேலும் கருத்தைக் கவரு மாயினும், குலைமாத்திரத்தால் நல்லனவாய்த் தோன்றுகின்ற அதன் கனிகளைப் பறித்துண்டல் மக்கட்குத் தீங்குபயப்பதாம். அதுபோல உறுப்பழகுகளால் கண்ணைக் கவர்கின்ற பொது மகளிர், பின் பொய்ந் நகை காட்டி அதனால் மேலும் கருத்தைக் கவர்வாராயினும், நகைப்புமாத்திரத்தால் அன்புடையராய்த் தோன்று கின்ற அவரது இன்பத்தினை நுகர்தல், அறம் பொருள்களை விரும்பி நிற்கும் நன்மக்கட்குக் கேடுபயப்பதாகும். ஆதலின், அவ்வாறு நன் னெறியை விட்டு விலகிச் செல்கின்ற மனத்தைத் தீங்கு தேடுவதாக அறிந்து அடக்குவீராக.

Romanized
------------
ilainala vāyiṉum eṭṭi paḻuttāl
kulainala vāṅkaṉi koṇṭuṇa lākā
mulainalaṅ koṇṭu muṟuvalcey vārmēl
vilakuṟu neñciṉai veytukoḷ ḷīrē.

Meaning-[Pledge not Your Heart to Lust]
------------------------------------------
Fine though the leaves be of the nux vomica tree,
Its wealth of fruit is bitter on tongue, unfit to eat;
To them with rounded breasts and luring smile,
Pledge not your wavering heart in passion's heat.

reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"

Monday, June 17, 2013

[hymn 203] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

203:
பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொண்ட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.

பொழிப்புரை
-------------
செல்வச் செருக்கில் ஆழும் கீழ்மகனும், அறிவை மறைக்கின்ற அறியாமையாகிய இருளில் புல்லறிவாகிய மின்னல் ஒளியைப் பெற்று நிற்பவரும் ஒழுக்கம் இல்லாத பெண்டிரது மயக்கத்தில் வீழ்தலல்லது, அம்மயக்கத்தை உடைய மனத்தைத் தேற்றி நன்னெறிப்படுத்த மாட்டுவாரல்லர்.

Romanized
------------
poruḷkoṇṭa kaṇṭaṉum pōtattai yāḷum
iruḷkoṇṭa miṉveḷi koṇṭuniṉ ṟōrum
maruḷkoṇṭa mātar mayaluṟu vārkaḷ
maruḷkoṇṭa cintaiyai māṟṟakil lārē.

Meaning-[Adulterers Rush to Doom]
------------------------------------------
The king of treasures vast, and the lordly souls
Whose light of wisdom dispels the encircling gloom--
Even such yield to woman's sensuous charms;
Their judgment thus enslaved, they rush to their doom.

reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"

Monday, June 10, 2013

[hymn 202] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

202:
திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென் றெண்ணி அறையிற் புதைத்துப்
பொருத்தமி லாத புளிமாங் கொம்பேறிக்
கருத்தறி யாதவர் காலற்ற வாறே.


பொழிப்புரை
-------------
தமக்கு உறுதியை அறியாதவர் ஆத்தமனையாள் அகத்தில் இருக்கவே, பிறன் காத்த மனையாளைக் காமுறுதல், காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்திற்கு இடருற்ற வாறன்றியும், தாம் செழிப்புறப் பேணி வளர்த்த தேமாமரத்தில் பழுத்த பழத்தைக் குறையுடையதென்று வீட்டில் புதைத்துவிட்டு, அயலான் வளர்த்த புளிமாமரத்தின் நுனிக்கிளையில் ஏறிக் கீழே விழுந்து கால் ஒடிந்ததையும் ஒக்கும்.

Romanized
------------
tirutti vaḷarttatōr tēmāṅ kaṉiyai
aruttameṉ ṟeṇṇi aṟaiyiṟ putaittup
poruttami lāta puḷimāṅ kompēṟik
karuttaṟi yātavar kālaṟṟa vāṟē. 

Meaning-[Seek Not the Sour Tamarind: Sweet Mango is at Hand]
---------------------------------------------------------------------------
The sweet, ripe mango, tended with loving care,
They bury deep, deeming it unripe still;
And up the gnarled tamarind they climb for the sour fruit,
Only to break their limbs--they whom the senses beguile.

reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"

Tuesday, June 4, 2013

[hymn 201] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

8 பிறன்மனை நயவாமை - NOT COMMITTING ADULTERY

201:
ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே.

பொழிப்புரை
-------------
அறமுதலிய நான்கற்கும் உறுதுணையாய் அமைந்த மனைவி தன் இல்லத்தில் இருக்க அவளை விடுத்துப் பிறன் தனது இல்லத்துள் வைத்துப் பாதுகாக்கின்ற மனைவியைக் கூடுதற்கு விரும்பு கின்ற, எருதுபோலும் மாந்தரது தன்மை, தனது தோட்டத்தில் காய்த்துக் கனிந்துள்ள பலாப் பழத்தை உண்ண விரும்பாமல், அயலான் புழைக்கடையில் உள்ள ஈச்சம்பழத்தை உண்பதற்குக் களவினை மேற்கொண்டு துன்புறுந்தன்மை போல்வதாம்.

Romanized
------------
ātta maṉaiyāḷ akattil irukkavē
kātta maṉaiyāḷaik kāmuṟuṅ kāḷaiyar
kāycca palāviṉ kaṉiyuṇṇa māṭṭāmal
īccam paḻattuk kiṭaruṟṟa vāṟē.

Meaning-[Seek not the Thorney Date; Ripened Jack-Fruit is at Hand]
-----------------------------------------------------------------
The dear, wedded wife pines within the home,
But the lusting youth covets the guarded neighbour's mate;
Even as one, declining the luscious ripeness of the jack,
Yearns for the tamer taste of the thorny date.

reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"

Monday, June 3, 2013

[hymn 200] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

200:
கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதகமாம் அவை நீக்கித்
தலையாம் சிவனடி சார்ந்துஇன்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவைஞானா னந்தத்து இருத்தலே

பொழிப்புரை
-----------------
உயிர்க் கொலை, திருட்டு, பெண் இச்சை, பொஇ பேசுதல், கள் உண்ணுதல் ஆகிய ஐந்தும் மிகப் பெரும் பாவங்கள் – தீச் செயல்களாகும்.இந்தத் தீச்செயல்களை விட்டொழித்துத், தலைவனாம் சிவபெருமான் திருவடித்துணை நாடி இன்புற்று இருப்பவர்களுக்கு (தலையாம் சிவனடி – தலைப் பகுதியில் உள்ள சிவ ஒளித் தியானத்தில் மகிழ்ந்து அதோடு இரண்டறக் கலந்து இருப்பவர்களுக்கு ) வேறு வகைத் துன்பங்கள் இல்லை. சித்த சமாதியில் இவர்கள் ஞானாந்தம் அடைந்திருப்பர்.

Romanized
---------------
kolaiyē kaḷavukaḷ kāmam poykūṟal
malaivāṉa pātakamām avai nīkkit
talaiyām civaṉaṭi cārntuiṉpam cārntōrkku
ilaiyām ivaiñāṉā ṉantattu iruttalē

Meaning [Shun Sinful Living]
-------------------------------------------
Killing, theiving, drinking, lusting, lying--
These horrid sins detest and shun; to those
Who Siva's Holy Feet attain and the Bliss eternal,
They come not; such men in Wisdom's bliss ever repose.

reference:
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"

Friday, May 31, 2013

[hymn 199] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

7 MEAT EATING--FORBIDDEN

199:
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாருங் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றியத் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே.


குறிப்புரை
-------------
பொல்லாங்கு, கொலையால் வருவதாயும், கொலை செய்யத் தூண்டுவதாயும் இருத்தல். இது பற்றி அதனை உண்பாரை, `புலையர்` என்றார். புலையர் - கீழ்மக்கள்.
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை`` -குறள் 315
என்றவாறு, அருளில்லார், `அறிவுடையார்` எனப்படாமை யானும்,
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். -குறள் 252
என்பதனால் புலால் உண்பவர் அருளுடையாராதல் கூடாமை யானும் அவர் `உயர்ந்தோர்` எனப்படாது `இழிந்தோர்` எனவே படுவர் என்பது உணர்க. செல்லாக - சிதல்போல; சிதல் அரித்துத் தின்னும் இயல்புடையது. மறித்து - மீள ஒட்டாது மடக்கி.
உண்ணாமை உள்ள துயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு. -குறள் 255
எனத் திருவள்ளுவரும், `புலால் உண்பவர் நிரயம் புகுந்து மீளார்` என்றார். இரண்டிடத்தும், `மீளாமை` என்பதற்கு, `நெடுங்காலம் கிடத்தல்` என்பதே கருத்து என்க.

Romanized
------------
pollāp pulālai nukarum pulaiyarai
ellāruṅ kāṇa iyamaṉṟaṉ tūtuvar
cellākap paṟṟiyat tīvāy narakattil
mallākkat taḷḷi maṟittuvaip pārē.

Meaning-[Meat Eaters Will Have to Face Hell's Torments]
-----------------------------------------------------------------
The ignoble ones who base flesh do eat,
Death's agents bind them fast for all to see;
And push them quick into the fiery jaws of hell,
And fling them down there for ever to be.

reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"

Thursday, May 30, 2013

[hymn 198] Daily 1 hymn of Tirumantiram with Explanation

198:
கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.

குறிப்புரை
-------------
``கொல்லிடு, சொல்லிடு`` என்பவற்றில் இடு, துணைவினை, ``நில்லிடும்`` என்றதில் இடு, இசைநிறை, வல்லடிக் காரர், வலிய தண்டலாளர்; யம தூதர். வலிக் கயிறு - வலிமையுடைய கயிறு; யம பாசம். இஃது அவர் நினைத்த அளவில் நினைக்கப் பட்டோரை இறுகிக் கட்டும் கடவுள் தன்மை பெற்றது. ``நில்லென்று`` என்றது, தம் தலைவன் முன் கொண்டுபோய் நிறுத்திக் கூறுவது.
இதனால், கொலைப் பாவத்தினது கொடுமை கூறும் முகத்தால் கொல்லாமை வலியுறுத்தப்பட்டது.

Romanized
------------
kolliṭu kutteṉṟu kūṟiya mākkaḷai
vallaṭik kārar valikkayiṟ ṟāṟkaṭṭic
celliṭu nilleṉṟu tīvāy narakiṭai
nilliṭum eṉṟu niṟuttuvar tāmē. 

Meaning-[They Who Kill Reach Hell]
-----------------------------------------
The men who shouted,"Kill and stab,"
Them with strong ropes Death's ruffians bind;
And stationing them at the fire-gates of Hell,
The agents yell, "Stand, go; and in the fire pit roast."

reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"

Wednesday, May 29, 2013

[hymn 197] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

கொல்லாமை [NOT KILLING]
-----------------------

197:
பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமுஞ் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.


பொழிப்புரை
-------------
மெய்யுணர்வு நிலைபெறுதற்குத் துணையாய குருவழிபாட்டிற்கும் பல மலர்களால் தொடுக்கப்பட்டமாலை முதலியவை இன்றியமையாதனவே. ஆயினும், சிறப்புடைய மாலை பிற உயிர்களைக் கொல்லாமைகள் பலவும் இயைந்த பண்பே. இன்னும் சிறப்புடைய அசையா விளக்கு ஒருதலைப் பட்ட மனமும், இலிங்கம் இருதயத்தில் பொருந்தி நிற்கும் உயிராகிய ஒளியின் முனையுமாம்.

Romanized
------------
paṟṟāya naṟkuru pūcaikkum paṉmalar
maṟṟōr aṇukkaḷaik kollāmai oṇmalar
naṟṟār naṭukkaṟṟa tīpamuñ cittamum
uṟṟārum āvi amarntiṭam ucciyē.

Meaning-[Don't Kill Even an Atom of Life]
----------------------------------------------
Flowers many to dear, loved Master's worship;
Even one atom of life, kill not:
The lovely garland, the steady flame, the firm will,
The passionate heart--such the worship's crowning part.

reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"

Tuesday, May 28, 2013

[hymn 196] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

196:
அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விகொ டுமின் தலைப்பட்ட போதே.

பொழிப்புரை
-------------
வாய்ப்பு நேரும்பொழுது அது கிடைத்துவிட்ட தென்று புறங்கூறிப் பாவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள். தீக்குணம் உடையாராய்ப் பிறர் பொருளைக் கள்ளாதீர்கள். நற்பண்பு உடையாராய் உயர்ந்து, உண்ணும்போது சிறிதாயினும் பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள்.

Romanized
------------
avviyam pēci aṟaṅkeṭa nillaṉmiṉ
vevviya ṉākip piṟarporuḷ vavvaṉmiṉ
cevviya ṉākic ciṟantuṇṇum pōtoru
tavviko ṭumiṉ talaippaṭṭa pōtē. 

Meaning-[Share With Others Before You Eat]
-----------------------------------------
Speak not in envy, stray not from the Dharmic way,
Covet not other's riches with lustful greedy glances;
With heart to pity attuned, as you sit down to eat,
Share with others before the feast commences.


reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"

Monday, May 27, 2013

[hymn 195] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


195:
ஆம்விதி நாடின் அறஞ்செய்மின் அந்நிலம்
போம்விதி நாடின் புனிதனைப் போற்றுமின்
ஆம்விதி வேண்டும தென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே.

பொழிப்புரை
-------------
மக்களாய்ப் பிறக்கின்ற ஊழைப் பெற்ற அருமை அறியவல்லார்க்கு மேலும் உயர்வடைகின்ற நெறி இன்றியமை யாதது. அஃது என்ன என்பதைச் சொல்லுமிடத்து, இவ்வுலகில் மீளவும் பிறந்து உயர்ந்து நிற்கின்ற நெறியை விரும்புவீராயின், பசுபுண்ணியத்தைச் செய்யுங்கள். அவ்வாறின்றிச் சிவலோகத்திற் சென்று சிவானந்தத்தை அடைகின்ற நெறியை விரும்புவீராயின், சிவபெருமானை வழிபடுத லாகிய சிவபுண்ணியத்தைச் செய்யுங்கள்.

Romanized
------------
āmviti nāṭiṉ aṟañceymiṉ annilam
pōmviti nāṭiṉ puṉitaṉaip pōṟṟumiṉ
āmviti vēṇṭuma teṉcoliṉ māṉiṭar
āmviti peṟṟa arumaival lārkkē.

Meaning-[Pray and Perform Noble Deeds-This is the Law of Life
Eternal]
-----------------------------------------
Perform thou noble deeds, good Karma to shape,
Praise thou the Holy One, the Holy Land to reach;
This is the law we need, this the law for men
ho, blessed with earthly life, seek the Life eternal.



reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"

Wednesday, May 22, 2013

[hymn 194] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

194:
இன்புறு வண்டிங் கினமலர் மேற்போய்

உண்பது வாச மதுபோல் உயிர்நிலை
இன்புற நாடி யிளைக்கிலு மூன்றொளி
கண்புறம் நின்ற கருத்துள்நில் லானே. 

பொழிப்புரை
-------------
தேனை விரும்புகின்ற வண்டு அதனை உண்பது மலரிடத்தே சென்று அதன்கண் வீழ்ந்தேயாம். உயிரினுடைய நிலைமையும் அத்தன்மையதே. அஃதாவது, இன்பத்தை விரும்புகின்ற உயிர் அதனைப் பெறுவது சிவனை அடைந்து அவனிடத்து அடங்கி நிற்கும் பொழுதேயாம். வண்டு தேனை உண்ண விரும்பிப் பிற இடங்களில் ஓடியிளைப்பினும் அது கிடையாததுபோல, உயிரும் இன்பம் பெற விரும்பிப் புறக்கண்வழி ஓடி இளைப்பினும் அங்ஙனம் ஓடுகின்ற உயிரில், அன்பின்ஊன்ற உள்ளெழும் சோதியாகிய (தி.12 பெ. பு. திருஞான - 835) சிவன் விளங்கமாட்டான். `எனவே, இன்பம் கிட்டாது` என்பதாம்.

Romanized
------------

iṉpuṟu vaṇṭiṅ kiṉamalar mēṟpōy
uṇpatu vāca matupōl uyirnilai
iṉpuṟa nāṭi yiḷaikkilu mūṉṟoḷi
kaṇpuṟam niṉṟa karuttuḷnil lāṉē. 

Meaning-[Lord is the Light Beyond Visible Reach]
--------------------------------------------------------
The bee, that nectar seeks, flies high for its flower on top
And there, alone, it sucks the fragrant juice;
Even so, they who seek the blessed grace divine,
Aspire for the Light beyond visible reach of eyes.