Pages

Thursday, January 31, 2013

[hymn 158] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


158: 
வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடைந் தால் அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே.

பொருள் விளக்கம்
--------------------------
உலகமெங்கும் குயவர்கள் குளத்திலிருந்து மண்கொணர்ந்து தங்கள் அகத்தினுள்ளே முற்றத்தின்கண் பல குடங்களைப் பண்ணுகின்றார்கள். அக்குடங்கள் ஆளப்பட்டு உடைந்து விடுமானால், வறுக்கும் ஓடாகப் பயன்படும் என்று அகத்திலே சேமித்து வைப்பார்கள். ஆனால் பண்ணப்படும் முறையால் அக் குடத்தோடு ஒப்பனவாகிய உடம்புகள் சிதைந்தால், நொடிநேரமும் மக்கள் வீட்டில் வைத்திருக்க ஒருப்படார்.
ஒருப்படாமைக்குக் காரணம், சிதைந்த, உடம்பு பெரிதும் தீ நாற்றம் வீசி, மக்களுக்கு இன்னல் விளைத்துத் தானும் அழுகியொழிவதாய் இருத்தலே. ``அதனால், பின்னர் அத்துணை நெருப்புக்கு முதலாகும் உடலை முன்னரே வெறுத்து உயிர்க்கு உறுதி தேடக் கருதுதலே அறிவுடைமையாம்`` என்றவாறு. ``ஓர் குயவன்`` இனம் பற்றிய ஒருமை, உயிர் நீங்கியபின், உடல் பலராலும் வெறுக்கப்படும் பொருளாம் என்பதனை,
``கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே`` -தி.5 ப.90 பா.4
என்று அப்பரும் அருளிச்செய்தார், ``வைப்பர்`` என்றும், ``வையார்`` என்றும் உறழ்ந்து காட்டிய அதனால், பண்ணப்படும் முறையில் இரண்டும் ஒத்தல் பெறப்பட்டது. படவே, `உடல்களும் உலகெங்கும் தந்தையது உடம்பினின்றும் ஒரு கூற்றை எடுத்துத் தாயின் வயிற்றில் வைத்து உருப்பெருமாறு படைப்புக் கடவுளால் ஆக்கப்படும்` என்பது கொள்க. இத் திருமந்திரம் வேற்றுமையணி. பின்னிரண்டடிகள் உயிரெதுகை.

Romanized
--------------
vaḷattiṭai muṟṟattōr mānilam muṟṟuṅ
kuḷattiṉmaṇ koṇṭu kuyavaṉ vaṉaintāṉ
kuṭamuṭain tālavai ōṭeṉṟu vaippar
uṭaluṭain tāliṟaip pōtum vaiyārē. 

Meaning-[When Body-Pot Breaks None Cares To Retain It]
-------------------------------------------------------------------
This universe entire of treasures vast compact,
The Great Potter from watery clay wrought to shape;
If the moulded pot breaks, men keep the pieces still,
But if the vital body cracks, who even a while cares it to keep?

Wednesday, January 30, 2013

[hymn 157] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


157: 
ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகிட்கு எரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே.

பொருள் விளக்கம்
--------------------------
கல்லென்று ஆரவாரித்து எழுகின்ற சுற்றத் தாரும், மனைவியரும், மக்களும் ஆகிய எல்லாரும் ஊர் எல்லையைக் கடந்து அப்பால் வரமாட்டாது அவ்வெல்லைக்குள்ளே நின்றொழி வார்கள். அதன்பின் பிறர், மரங்களை, வேரும் முனையும் போகத் தறித்துக் கொணர்ந்த விறகின் மேல் வைத்து நெருப்பை நன்றாக மூட்டி எரியப் பார்த்துவிட்டு, நீரிலே சென்று தலை முழுகுவார்கள்.
`காலத்தாலும், இடத்தாலும் கட்டுண்டு கிடக்கும் அவர்களைப் பற்றுவதால் பயனில்லை` என்பதாம். ``கால்`` என்றது எல்லை. அயன்மையை `நீதியின்மை` என்றார்.

Romanized
--------------
ārtteḻu cuṟṟamum peṇṭirum makkaḷum
ūrttuṟaik kālē oḻivar oḻintapiṉ
vērttalai pōkki viṟakiṭ ṭerimūṭṭi
nīrttalai mūḻkuvar nītiyi lōrē. 

Meaning-[They Too Finally Depart Cleansing Themselves by a Bath]
----------------------------------------------------
Mourning friends, weeping spouse, dear children all,
They but followed him to the river's edge--not a step beyond;
Then sorrow dropped its mark, quick the pyre was lit,
Then the plunge in water, heart-whole they, graceless band.

Tuesday, January 29, 2013

[hymn 156] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


156:
வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்
அச்சக லாதென நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர்
எச்சக லாநின் றிளைக்கின்ற வாறே.

பொருள் விளக்கம்
--------------------------
இறந்தவனது உடம்பை ஊரார் கொண்டுபோய்ப் புறங்காட்டில் வைத்து நீங்கியதைக் காணும் பொழுது, என்றும் அச்சுப் போல உடன் இருந்து உதவும் என்று அறிவுடையோர் அறிந்து விரும் புகின்ற அந்த அரிய பொருளாகிய இறைவன் ஒருவனே பேரருள் காரணமாக அவரைப் பின் தொடர்ந்து செல்வான். பிறர் யாவரும் ஒன்றும் செய்யமாட்டாது இளைத்து வருந்துகின்றவர்கள் தாம்.
`ஆதலின் அவனையே நாடுக` என்பது குறிப் பெச்சம். `பிச்சு, எய்ச்சு` என்பன, `பித்து, எய்த்து` என்பவற்றின் சிதைவு.

Romanized
--------------
vaiccakal vuṟṟatu kaṇṭu maṉitarkaḷ
accaka lāteṉa nāṭum arumporuḷ
piccatu vāyppiṉ toṭarvuṟum maṟṟavar
eyccaka lāniṉ ṟiḷaikkiṉṟa vāṟē.

Meaning-[Coveting Riches of the Dead Some Remain Back]
----------------------------------------------------
The body to its final fate consigned,
Friends and kinsmen all dispersed;
But some remained; long had they lusted for the dead man's wealth,
Intent on riches, men deem they could for ever hold,
Panting and pining for what they might carry by stealth.

Monday, January 28, 2013

[hymn 155] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

155: 
மதுவூர் குழலியும் மாடும் மனையும்


இதுவூர் ஒழிய இதணம் தேறிப்
பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி
மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே.


பொருள் விளக்கம்
------------------------------
எவன் ஒருவனையும் ஊரார் அவன் மனைவியும், செல்வமும், மாளிகையும் ஊரிலே நின்றுவிட, ஒரு நடைப்பரண்மேல் ஏற்றி, ஊர்க்குப் பொதுவாய்ப் புறத்தே உள்ள சுடுகாட்டை நோக்கிச் சுமந்து சென்று, உள்ளத்தில் அன்பு மேம்பட்டு எழ எடுத்து வைத்துவிட்டுப் போவதையே பார்க்கின்றோம்.
`அதற்குமேல் அவர்களால் என்ன செய்ய இயலும்! ஆகவே, நாட்டுக்கு நாயகனாகியும், ஊருக்குத்தலைமகனாகியும் இருக்க முயல்வதனால் பயன் என்னை` என்பதாம். மது, தேன் போன்ற அன்பு.

Romanized
--------------
matuvūr kuḻaliyum māṭum maṉaiyum
ituvūr oḻiya itaṇam tēṟip
potuvūr puṟañcuṭu kāṭatu nōkki
matuvūra vāṅkiyē vaittakaṉ ṟārkaḷē.

Meaning-[They Hurried the Body to Flames]
----------------------------------------------------

Death strikes from life's enchanted cup
Honeyed delights of wife, cherished treasures of heart;
Kinsmen bore him on bier to the common burning ghat,
And the burden discharged hurried home,
Having done their part.

Sunday, January 27, 2013

[hymn 154] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


154: முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர்செப்ப மதிலுடைக் கோயில் சிதைந்தபின்ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.

பொருள் விளக்கம்
------------------------------
முப்பதும், முப்பதும், முப்பத்தாறும் தொண்ணுற்றாறு தத்துவங்கள். 
அவை _/|\_
ஆன்மத்துவம்-24,
நாடி-10, 
அவத்தை -5, 
மலம் -3, 
குணம் -3, 
மண்டலம் -3, 
பிணி -3, 
விகாரம் -8, 
ஆதாரம் -6, 
தாது -7, 
மரபு -10, 
கோசம் -5, 
வாயில் -9 
....................................
ஆக மொத்தம் -96
...................................
இந்த 96 தத்துவங்களும் செம்மையாக அமைந்த பாதுகாப்பு மதிலுடைய கோயிலுக்குள் வாழ்ப்வர், சிறப்பாகச் செய்யப்பட்ட பாதுகாப்பு மதிலுடைய அந்தக் கோயில் பாழடைந்து, பழுதடைந்து கெட்ட பிறகு, அந்தக் கோயிலுள் இருந்தவர்கள் அனைவரும் ஒருசேர ஓடிவிட்டார்கள். உயிர்போய் உடல் அழியத் தத்துவங்கள் தாமே நீங்கும் என்பது கருத்து. செப்ப- சிறப்பாக, செம்மையாக. மதிள்- மதில். சிதைதல் - கேட்டழிதல். ஓப்ப - ஒன்றாக.

Romanized
--------------
muppatum muppatum muppat taṟuvarum
ceppa matiḷuṭaik kōyiluḷ vāḻpavar
ceppa matiluṭaik kōyil citaintapiṉ
oppa aṉaivarum ōṭṭeṭut tārkaḷē.

Meaning-[The Body Temple Crumbled; the Ninty-Six Tattvas Fled]

----------------------------------------------------
The thirty and thirty and thirty-six they say,
They that behind temple walls safely dwelt,
They saw the temple walls crash and crumble,
And all alike, without a trace, thence did melt.

Saturday, January 26, 2013

[hymn 153] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

153: நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகையொன்று ஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.


பொருள் விளக்கம்
------------------------------
ஒருவன் நமது நாட்டிற்கே தலைவன் தான்; `அவன் நம் ஊரவன்` என்பதில் நமக்குப் பெருமைதான்; ஆயினும், நடை முறையில் நிகழ்வது, அவனும் காட்டுக்குப் போதற்குரிய ஒரு பல்லக்கின் மேல் ஏறி, நாட்டில் உள்ளோர் பலர் பின்னே நடந்து செல்ல, முன்னே பறைகள் பல கொட்டச் செல்லுகின்ற முறைமைதான்; வேறில்லை.

Romanized
--------------
nāṭṭukku nāyakaṉ nammūrt talaimakaṉ
kāṭṭuc civikaiyoṉ ṟēṟik kaṭaimuṟai
nāṭṭārkaḷ piṉcella muṉṉē paṟaikoṭṭa
nāṭṭukku nampi naṭakkiṉṟa vāṟē.

Meaning-[Final Procession to Grave]
----------------------------------------------------
Lord was he of our land, sole leader of our place,
Mounted now on palanquin for the ultimate journey's end;
Mourners walked behind, clashing drums beat afore;
Thus did the solemn show, in ample length, extend.
---thevaram.org

Thursday, January 24, 2013

[hymn 152] Daily 1 hymn of Thirumanthiram with Explanation



152
பந்தல் பிரிந்தது பதண்டாரங் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தனை
துன்புறு காலந் துரிசுவர மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதகன் றார்கேள.

பொருள் விளக்கம்
------------------------------
பந்தல்-உடலாகிய மேல் போர்வை. பண்டாரம்- களஞ்சியம்-உயிராகிய பொக்கிசம். ஒன்பது வாசல்- உடலில் உள்ள ஒன்பது வழிகள். கண்கள் இரண்டு,செவிகள் இரண்டு. மூக்கு துவாரங்கள் இரண்டு. வாய் ஒன்று, சிறுநீர், மலப்பாதை என ஒன்பது.ஒக்க – ஒருசேர.துரிசுவர- முடிவுகாலம் நெருங்க. உயிரின் மேல் அமைந்லுடலாகிய பந்தல் பாழடைந்து விட்டது. உயிர்ச் செல்வம் வறண்டு விட்டது.ஒன்பது வாசல் கதவுகளும் ஒரே நேரத்தில் அடைத்து விட்டன.உயிர்க்கு முடிவுகாலம் வந்து விட்டது.அன்புடைய சுற்றத்தார் அழுது புலம்பினார்கள். பின்னவர்களும் போய்விட்டனர். இதுதான் வாழ்க்கை, உலகியல் என்பது உணர்த்தும் பாடல் இது.

Romanized
--------------
pantal pirintatu pataṇṭāraṅ kaṭṭaṟṟa
oṉpatu vācalum okka aṭaittaṉai
tuṉpuṟu kālan turicuvara mēṉmēl
aṉpuṭai yārkaḷ aḻutakaṉ ṟārkēḷa.

Meaning-[Kith and Kin Wept and Left]
---------------------------------------------------
The roof to pieces went the bonds of life broke loose,
The mansion’s nine gates closed fast for ever and aye,
Time’s painful march fast gaining apace,
One by one weeping they left him as the hours passed by.

Wednesday, January 23, 2013

[hymn 151] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


151:
 கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சற
நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார்
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே.

பொருள் விளக்கம்
------------------

உடல் நிலையை நாடியால் ஆய்ந்துணர்வோர் அவ்வாறு ஆய்ந்து கைவிட்டுவிட, அதன்பின் அறிவு அழிந்து, உட லாகிய தேர்க்கு அச்சாய் இருந்த உயிர் நீங்கிவிட, சோற்றை நெய்கலந்து சுவைபட உண்டு வாழ்பவனவாகிய ஐம்பூதக் கூறுகளும் அழிவன வாயின, அப்பொழுது, முன்பு, உடம்பால் தழுவப்பட்டிருந்த மனை வியும், செல்வமும் முன்போலவே இருக்கவும், அவ்வுடம்பு அவர்களை விட்டு வேறிடத்திற்குப் போக விடைபெறுவதுதான் கண்டது.



Romanized
------------
kaiviṭṭu nāṭik karuttaḻin taccaṟa
neyyaṭṭic cōṟuṇṇum aivarum pōyiṉār
maiyiṭṭa kaṇṇāḷum māṭum irukkavē
meyviṭṭup pōka viṭaikoḷḷu māṟē.  

Meaning-[Nothing Remains, When Life Departs]
---------------------------------------------------------------
 
 

The pulse failed, the mind lost its axle-hold,
The senses five, that buttered sweets enjoyed, left their home;
The fair-eyed beloved and dear treasures remained to stay,
But the spark of life for ever quitted
The warm precincts of clay.

Tuesday, January 22, 2013

‎[hymn 150] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


150: 
வாசந்தி பேசி மணம்புணர்ந்து அப்பதி
நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை
ஆசந்தி மேல்வைத்து அமைய அழுதிட்டுப்
பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே.


பொருள் விளக்கம்

------------------------- 
குருக்கத்திக் கொடியின் கீழ்க் களவிற்கலந்து, பின் கற்பு நெறியில் மணம் செய்துகொள்கின்ற தலைவனும், தலைவியும் தலைநாளில் இருந்த காதல், நாள்செல்லச் செல்லத் தெவிட்டுவதாய் விடப் பின்பு ஒருவரை ஒருவர் நினைப்பதையும் விட்டுவிடுவர். இறுதியில் பாடைமேல் வைத்துக் குறைவில்லாமல் அழுது, தங்கள் அன்போடு, அவரையும் நெருப்பினால் எரித்துப் போக்கிவிட்டுத் தெய்வமாக வைத்துப் படையல் இடுவார்கள்.

Romanized

---------------
vācanti pēci maṇampuṇar tampati
nēcan teviṭṭi niṉaippoḻi vārpiṉṉai
ācanti mēlvait tamaiya aḻutiṭṭup
pācantīc cuṭṭup paliyaṭṭi ṉārkaḷē.


Meaning-[Alive They Embraced the Body, Dead They Consigned it to Flames]
---------------------------------------------------------------
Lips met lips, bodies licked in close embrace,
And love in surfeit cloyed--then died memories long cherished,
Soon the body on bier was set while mourners mourned;
All passions spent, the body in the leaping flames perished.

[hymn 149] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

149:

மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்
சென்றத்தா என்னத் திரிந்திலன் தானே.



பொருள் விளக்கம்
-------------------------=
நம்பி(சிறந்த ஆடவன்) ஒருவன் தன் முயற்சி யாலே பெரும் பொருள் ஈட்டிப் பலரும் வியக்கப் பல மேல் நிலைகளோடு கூடிய மாளிகையைக் கட்டினான். அவன் அதனைக் கட்டியதும் வெற்ற வெளியான இடத்திலேதான். பின் அவ்விடத் திற்றானே நான்குபேர் சுமக்கின்ற ஒரு பல்லக்கைப்பெற்று அதில் ஏறினான். அங்கு அப்பொழுது அவன் தன் மனைவிக்கும், மகனுக்கும், ஊர்த் தோட்டிக்கும் ஒவ்வொரு புத்தாடையை வழங்கினான். ஆயினும், பலர் நின்று, `தலை வனே` என்று கூப்பிட்டுக் கதறவும், திரும்பாமலே போய்விட்டான்.

Romanized
---------------
maṉṟattē nampi māṭam eṭuttatu
maṉṟattē nampi civikaipeṟ ṟēṟiṉāṉ
maṉṟattē nampi mukkōṭi vaḻaṅkiṉāṉ
ceṉṟattā eṉṉat tirintilaṉ tāṉē.


 Meaning-[Pomp and Glory Lead But to the Grave]
------------------------------------------------------------------
In pride of pomp a stately mansion he built,
In rage of wealth into the palanquin he stept,
In vain excess gave away largesse in crores,
But ne'er his soul sought the Lord's green retreat.

Sunday, January 20, 2013

[hymn 148] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


148: அடப்ண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மெடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேயிறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.
பொருள் விளக்கம்
------------------------------
ஆடுதல்-சமைத்தல். அடிசில்-உணவு. மடக்கொடி-பெண். மந்தணம்- உடலுறவு. இறை- இதயம். நொந்தது- வலித்தது.வாய்க்குச் சுவையாக நன்கு சமைத்து உணவை உண்டு மகிழ்ந்தனர். மனையாளோடு கூடிக் குலவி இன்புற்று மகிழ்ந்தார். திடீரென்று ஒருநாள் இடதுபக்கம் நெஞ்சு வலிக்கிறது என்றார். உடனே உடல் கீழே கிடக்கப் படுத்தார். பின்னர் எழுந்திருக்கவே இல்லை. இறந்தே போனார். இதுதான் வாழ்க்கை. இதுதான் உடல் அழியக் கூடியது என்பதற்கு அடையாளம்.
Romanized
--------------
aappaṇṇi vaittār aicilai uṇṭār
meakkoi yārou mantaa koṇṭār
iappakka mēyiai nontatu eṉṟār
kiakkap pauttār kiantoin tārē.
Meaning-[Death Comes Sudden]
-------------------------------------------
The rich repast was laid and he dined and joyed, 
With damsels sweet in amorous dalliance toyed; 
“A little little pain-- on the left” he moaned
And laid himself to rest to be gathered to dust.  

Saturday, January 19, 2013

[hymn 147] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

147:  
சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற
ஆக்கை பிரிந்த தலகு பழுத்தது
மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக்கு வுண்பலி காட்டிய வாறே.

பொருள் விளக்கம்
-----------------------
`சீக்கை என்னும் வாயொலி உண்டாயிற்று; செயற் படுகின்ற உறுப்புக்கள் மடிந்து கிடையாகி விட்டன. உடம்பு உயிர்த் தொடர்பை நீங்கிவிட்டது. எலும்புகள் வீங்கிவிட்டன` என்று பல அறிகுறிகளைச் சொல்லி, மூக்கில் கைவைத்துப் பார்த்து ஐயம் நீங்கி, மூடி எடுத்துக்கொண்டு போய் ஊரார் காக்கைக்குப் பலி ஊட்டிய அளவில் முடிவதாகும் உடம்பின் நிலைமை.
Romanized
--------------
 
cīkkai viḷaintatu ceyviṉai mūṭṭiṟṟa
ākkai pirinta talaku paḻuttatu
mūkkiṉiṟ kaivaittu mūṭiṭṭuk koṇṭupōyk
kākkaikku vuṇpali kāṭṭiya vāṟē.
  
Meaning-[Body Dead is but a Feed for Ravens ]
-------------------------------------------------


Gangrened the sore, the body that Karma shaped
Grew loose of joints, the roof's beam rotted and fell;
And with finger on nose, they bore the body dead,
A plenteous feast for the ravens to feed.

[hymn 146] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

146:  
காலும் இரண்டு முகட்டலகு ஒன்றுள
பாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளப் புக அறி யாதே.

பொருள் விளக்கம்
-----------------------
 உடம்பாகிய இல்லத்திற்குத் தாங்கும் தூண்களும் (நடக்கின்ற கால்கள்) இரண்டு உள்ளன. மேட்டு உத்தரமும் (முது கெலும்பு) ஒன்று உண்டு. அவ்வுத்தரத்தின் இருபக்கங்களிலும் சார்த்தப் படுகின்ற பருத்த கழிகளும் (விலா எலும்புகளும் - பக்கத்திற்குப் பதினாறாக) முப்பத்திரண்டு உள்ளன. மேலே வேயப்பட்ட கூரை களும் (பலவகையான தோல்கள்) உள்ளன. இருப்பினும். உயிர் இந்த இல்லத்தில் நிலைத்திருப்பதில்லை; என்றாயினும் ஒரு நாள் புறப் பட்டுப் போய்விடும். போய்விட்டால் மீள வந்து முன்போல இதனுட் புகுதல் இல்லை.
Romanized
--------------
 kālum iraṇṭu mukaṭṭalaku oṉṟuḷa
pāluḷ paruṅkaḻi muppat tiraṇṭuḷa
mēluḷa kūrai piriyum pirintālmuṉ
pōluyir mīḷap puka aṟi yātē.
Meaning-[When Body Roof Falls, It Falls Forever ]
-------------------------------------------------
Two pillars support this roof and one single beam,
Thirty and two the rafters extend side ways,
But as the roof above decays and breaks,
Back to its mansion the breath of life fails its way to trace.

Thursday, January 17, 2013

[hymn 145] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


145
 ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
போனை நீக்கிப் பிணமென்று போட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. 

பொருள் விளக்கம்
---------------------------------
உடம்பு விழுந்தபின் இல்லத்தளவில் செயற்படு வோராகிய பெண்டிரும், மக்களுமேயன்றி, ஒருங்கு திரண்டு பல வற்றைச் செய்து முடிப்போராகிய ஊரவரேனும் பிரிந்தோருடன் செல்ல வல்லரோ எனின், அல்லர்; அவரும் அப்பெண்டிர் மக்களுடன் ஒருங்கு கூடி முன்னர்ப் பேரொலி உண்டாக அழுது, பின் அது காறும் அவர்க்குக் கூறி அழுத இயற்பெயர் சிறப்புப் பெயர்களை ஒழித்து, `பிணம்` என்னும் பெயரையே சொல்லி எடுத்துக் கொண்டு போய், `சூரை` என்னும் ஒருவகை முட்செடிகள் நிரம்பியுள்ள காட்டில் வைத்து எரித்து விட்டுத் தீட்டுப் போதற்கு நீரினுள் மூழ்கித் தூய்மை பெற்றா ராய்ப் பின்பு அவரைப் பற்றிய நினைவும் இல்லாதவரே ஆவர்.




Romanized
--------------
ūrelām kūṭi olikka aḻutiṭṭup
pōṉai nīkkip piṇameṉṟu pōṭṭuc
cūraiyaṅ kāṭṭiṭaik koṇṭupōyc cuṭṭiṭṭu
nīriṉil mūḻki niṉaippoḻin tārkaḷē. 


Meaning-[How Soon the Dead are Forgotten]
-----------------------------------------------------------
The neighbours gathered wailing loud and long, 
Denied him now a name, called him corpse, 
And bore him to the burning ghat and the body burnt, 
Then a ceremonial dip--and memory dies as the hours lapse. 

Wednesday, January 16, 2013

[hymn 144] Daily 1 hymn of Thirumanthiram with Explanation



144:   பண்டம்பெய் கூரை பதழகிய விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மெக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே. 
பொருள் விளக்கம்
------------------------------
பண்டம் என்றால் பொருள். இங்கே நல்வினைகள் தீவினைகள். பெய்நிரப்பப்பட்ட. கூரை- உடல். நல்வினை தீவினைகளை நுகர்வதற்கென்றே பெற்ற உடல், பழசாகி வயது முதிர்ந்து, தளர்ந்து விட்டால் (இறந்து ஒரு நாள் பிணமாக் கீழே விழுந்துவிட்டால்), உயிருடன் இருக்கும் போது அவ்வுடலால் பயன் அடைந்த(உண்ட-பயன்பெற்ற) மனைவி மக்கள் அந்த உயிர் போன வழியே போக மாட்டார்கள். அதாவது, இறந்த உடலைத் தாங்களும் இறந்துவிட மாட்டார்கள். ஆனால், அந்த உயிர் வாழும்போது செய்த நல்லறம், மேற்கொண்ட ஒழுக்கம், புண்ணிய செயல்கள் அந்த உயிர்க்கு துணையாக நெருங்கி நிழலாகச் செல்லும். மற்றவை எதுவும் கூட வராது. கூட வருவது செய்த புண்ணிய பாவங்களே( மண்டி-நெருங்கி).
Romanized
--------------
paṇṭampey kūrai pataḻakiya viḻuntakkāl
uṇṭaap peṇṭirum mekkaḷum piṉcelār
koṇṭa viratamum ñāṉamum allatu
maṇṭi avaruṭaṉ vaḻinaṭa vātē.
Meaning-[Your Vigil and Wisdom Alone Accompany Departing Soul]
-----------------------------------------------------------------------------
This roof of delights when by use to pieces falls’
Wife nor children who all enjoyed follow the parting Soul’
Only the holy vigils kept and wisdom gained--
Remain to save others dwindle and desert us all.

Tuesday, January 15, 2013

[hymn 143] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


143: மெண்ணொன்று கண்டீர் இருவைகப் பதாத்திரம்
திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டமெண் ணானார்ப்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.
பொருள் விளக்கம்
------------------------------
மண் ஒன்று- ஒரே தன்மையுடைய மண். மண் ஒன்றுதான். அதனாலான கலயங்கள்(பாத்திரங்கள்) இரண்டு. ஒரு பாத்திரன் தீயினால் சுடப்பட்ட்தால் உறுதி உடையதாக இருந்தது(திண்மை-உறுதி). இன்னொரு பாத்திரம் பச்சை மண். சுடப்படாதிருந்த்து. அது மழை பெய்து தண்ணீரில் நனைந்தவுடன், கரைந்து மீண்டும் களி மண்ணோடு மண்ணாக்க் கலந்து விட்டது. இது போலத்தான் உலக மக்கள் பலரும் உள்ளனர்.தீயால் மண்ணாக் கலந்து விட்டது. தீயால் மண்கலம் திடப்படும். தீயிடப்படா பச்சை மண் கலம நீரில் கரையும். எனவே இறையருளை உயிர்கள் உறுதுணையாக்க் கொள்ள வேண்டும் என்பது குறிப்பு.
Romanized
--------------
meṇṇoṉṟu kaṇṭīr iruvaikap patāttiram
tiṇṇeṉṟu iruntatu tīviaic cērntatu
viṇṇiṉṟu nīrvii mīṇṭame ṇāṉārppōl
eṇṇiṉṟi māntar iakkiṉṟa vāṟē.
Meaning-[Dust Into Dust That is Body’s Way]
------------------------------------------------------------
The Vessel’s clay was one but of two Karmas made,
Firm set until Fate its grim summons gave;
Then the rains poured and back to clay the vessel turned;
Thus countless hordes perish and pass to the grave.

Monday, January 14, 2013

[hymn 142] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


142: 
போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணியர் ஆயினார்
நாதன் நடத்தால் நயனங் களிகூர
வேதந் துதித்திடப் போடைந்தார் விண்ணே.


பொருள் விளக்கம்
--------------------------------

போதம் என்ற சொல்லுக்கு அறிவு, ஞானம், உபதேசம் என்று பல பொருள்கள் உண்டு.சிவஞான போதம் என்றும் சிலர் சொல்லுவர். மெய்ஞ்ஞான அறிவை உபதேசித்த எங்கள் புண்ணியரான நந்தி யெம்பெருமானை, அவரது உபதேசங்களை அறிவால் உணர்ந்து தியானித்துப் புண்ணியவாண்களானவர்கள்; சிவபெருமானின் திருநடனம் கண்டு களித்துப் பெற்ற பேரின்பப் பெருக்கால், கண்கள் பெற்ற பயன் பெற்று, வேதநூல்கள் எல்லாம் வணங்கிப் பணந்து பாடும் பரம்பொருளின் விண்ணுலக வாழ்வு பெற்றவராயினர். நாதன்- தலைவன். நடம்- நடனம். நயனம்- கண்கள். களிகூர- இன்பம் அடைய.
Romanized
---------
pōtan tarumeka puṇṇiya nantiyaip
pōtan tailvaittup puṇṇiyar āyiṉār
nāta naattāl nayaa kaikūra
vētan tutittiap pōyaaintār viṇṇē.
Meaning [Thus They Reached Heaven]
--------------------------------------------------------
Who in their minds kept our Nandi's Holy Name,
Nandi Wisdom's Lord they holy became,
As the Lord danced they beheld Him with eyes enthralled-----
While the Vedas sang in praise,
Reached Heaven’s sacred shores.

Sunday, January 13, 2013

[hymn 141] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


141:
சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்ன் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.

பொருள் விளக்கம்
---------------------------------
நந்தி-ஞானப் பரஞ்சுடர்.பரம்பொருள். கண்கள் கண்டு களிக்க வேண்டியவை(சந்திப்பது) இறைவன் திருவடிகளே. மனம் பார்த்து மகிழ வேண்டியது அந்தச் சிவப் பரம்பொருளின் செம்பொன் திருமேனியையே. வாழ்த்தி வணங்கி வழிபடத் தக்கது ந்ந்திப் பெருமானின் திருப்பெயரே. அறிவில்- உள்ளத்தில், கொள்ளத் தக்கது- கொண்டொழுகத் தக்கது நந்தி எம்பெருமானின் உபதேச மொழிகளையே- அருளுரைகளையே. வந்திப்பது- போற்றிப் புகழுதல். போதம்- உபதேசம். நெஞ்சிலும் நினைவிலும் நிற்க வேண்டியது- நிலைக்க வேண்டியது பரம்பொருள் சிந்தனை மட்டுமே என்பது பாடலின் பொருள்.

Romanized
-------------
cantip patunanti tatirut tāḷiai
cintip patunanti ceyya tirumēṉi
vantip patunanti nāmame vāymaiyāl
puntikku nipatu nantipo pōtamē.

Meaning-[Fill Thy Thoughts With Nandi]
--------------------------------------------------
 All they see is Nandi's Holy Feet twain
All they think is Nandi's Holy Form divine
All they chant is Nandi’s Name I throw,
In all their thoughts Nandi s golden Words and wise.

Saturday, January 12, 2013

[hymn 140] Daily 1 hymn of Thirumanthiram with Exp...


140
தானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே

பொருள் விளக்கம்
----------------------------

தானே- தாமாகவே, மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களும் நமக்கு அடங்கும். நம் சொற்படி இயங்கும். இந்த ஐம்புலன்களும், தாம் விரும்பியபடி, நம்மை இயக்கும் தம்மையை இழக்கும்.ஐம்புலன்களும் இதுஅரை அவை விரும்பு வண்ணம் நம்மை ஆட்டுவித்த நிலைமை மாறும். இவை எல்லாம் யாருக்குக் கைகூடும் என்றால், ஐம்புலன் இச்சையில் இருந்து விடுபட்டுத் தனியே சென்று(ஆசாபாசம் அகற்றிப்) பரம்பொருளை அடைந்து அவன் திருவடி பற்றியவர்களுக்கு, இவையெல்லாம் சித்திக்கும். மடைமாறும்-பாதை மாறும். சந்தித்தல்- சரணடைதல்.


Romanized
------------
tāṉē pulaaintun tavacam āyium
tāṉē pulaaintun tavacam pōyium
tāṉē pulaaintun taṉṉil maaimāṟum
tāṉē taittuem pirāṉtaaic cantittē.

Meaning [Seek His Grace the Senses Get Controlled]
---------------------------------------------------------------------------
Surely then the senses five under your control come,
Surely then the senses five back to their native homes retreat,
Surely then the senses five change their course,
If alone you seek the sole felicity of our Lord’s perfect Grace.