Pages

Sunday, January 13, 2013

[hymn 141] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


141:
சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்ன் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.

பொருள் விளக்கம்
---------------------------------
நந்தி-ஞானப் பரஞ்சுடர்.பரம்பொருள். கண்கள் கண்டு களிக்க வேண்டியவை(சந்திப்பது) இறைவன் திருவடிகளே. மனம் பார்த்து மகிழ வேண்டியது அந்தச் சிவப் பரம்பொருளின் செம்பொன் திருமேனியையே. வாழ்த்தி வணங்கி வழிபடத் தக்கது ந்ந்திப் பெருமானின் திருப்பெயரே. அறிவில்- உள்ளத்தில், கொள்ளத் தக்கது- கொண்டொழுகத் தக்கது நந்தி எம்பெருமானின் உபதேச மொழிகளையே- அருளுரைகளையே. வந்திப்பது- போற்றிப் புகழுதல். போதம்- உபதேசம். நெஞ்சிலும் நினைவிலும் நிற்க வேண்டியது- நிலைக்க வேண்டியது பரம்பொருள் சிந்தனை மட்டுமே என்பது பாடலின் பொருள்.

Romanized
-------------
cantip patunanti tatirut tāḷiai
cintip patunanti ceyya tirumēṉi
vantip patunanti nāmame vāymaiyāl
puntikku nipatu nantipo pōtamē.

Meaning-[Fill Thy Thoughts With Nandi]
--------------------------------------------------
 All they see is Nandi's Holy Feet twain
All they think is Nandi's Holy Form divine
All they chant is Nandi’s Name I throw,
In all their thoughts Nandi s golden Words and wise.