Pages

Monday, January 14, 2013

[hymn 142] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


142: 
போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணியர் ஆயினார்
நாதன் நடத்தால் நயனங் களிகூர
வேதந் துதித்திடப் போடைந்தார் விண்ணே.


பொருள் விளக்கம்
--------------------------------

போதம் என்ற சொல்லுக்கு அறிவு, ஞானம், உபதேசம் என்று பல பொருள்கள் உண்டு.சிவஞான போதம் என்றும் சிலர் சொல்லுவர். மெய்ஞ்ஞான அறிவை உபதேசித்த எங்கள் புண்ணியரான நந்தி யெம்பெருமானை, அவரது உபதேசங்களை அறிவால் உணர்ந்து தியானித்துப் புண்ணியவாண்களானவர்கள்; சிவபெருமானின் திருநடனம் கண்டு களித்துப் பெற்ற பேரின்பப் பெருக்கால், கண்கள் பெற்ற பயன் பெற்று, வேதநூல்கள் எல்லாம் வணங்கிப் பணந்து பாடும் பரம்பொருளின் விண்ணுலக வாழ்வு பெற்றவராயினர். நாதன்- தலைவன். நடம்- நடனம். நயனம்- கண்கள். களிகூர- இன்பம் அடைய.
Romanized
---------
pōtan tarumeka puṇṇiya nantiyaip
pōtan tailvaittup puṇṇiyar āyiṉār
nāta naattāl nayaa kaikūra
vētan tutittiap pōyaaintār viṇṇē.
Meaning [Thus They Reached Heaven]
--------------------------------------------------------
Who in their minds kept our Nandi's Holy Name,
Nandi Wisdom's Lord they holy became,
As the Lord danced they beheld Him with eyes enthralled-----
While the Vedas sang in praise,
Reached Heaven’s sacred shores.