Pages

Wednesday, January 16, 2013

[hymn 144] Daily 1 hymn of Thirumanthiram with Explanation



144:   பண்டம்பெய் கூரை பதழகிய விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மெக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே. 
பொருள் விளக்கம்
------------------------------
பண்டம் என்றால் பொருள். இங்கே நல்வினைகள் தீவினைகள். பெய்நிரப்பப்பட்ட. கூரை- உடல். நல்வினை தீவினைகளை நுகர்வதற்கென்றே பெற்ற உடல், பழசாகி வயது முதிர்ந்து, தளர்ந்து விட்டால் (இறந்து ஒரு நாள் பிணமாக் கீழே விழுந்துவிட்டால்), உயிருடன் இருக்கும் போது அவ்வுடலால் பயன் அடைந்த(உண்ட-பயன்பெற்ற) மனைவி மக்கள் அந்த உயிர் போன வழியே போக மாட்டார்கள். அதாவது, இறந்த உடலைத் தாங்களும் இறந்துவிட மாட்டார்கள். ஆனால், அந்த உயிர் வாழும்போது செய்த நல்லறம், மேற்கொண்ட ஒழுக்கம், புண்ணிய செயல்கள் அந்த உயிர்க்கு துணையாக நெருங்கி நிழலாகச் செல்லும். மற்றவை எதுவும் கூட வராது. கூட வருவது செய்த புண்ணிய பாவங்களே( மண்டி-நெருங்கி).
Romanized
--------------
paṇṭampey kūrai pataḻakiya viḻuntakkāl
uṇṭaap peṇṭirum mekkaḷum piṉcelār
koṇṭa viratamum ñāṉamum allatu
maṇṭi avaruṭaṉ vaḻinaṭa vātē.
Meaning-[Your Vigil and Wisdom Alone Accompany Departing Soul]
-----------------------------------------------------------------------------
This roof of delights when by use to pieces falls’
Wife nor children who all enjoyed follow the parting Soul’
Only the holy vigils kept and wisdom gained--
Remain to save others dwindle and desert us all.