Pages

Sunday, January 27, 2013

[hymn 154] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


154: முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர்செப்ப மதிலுடைக் கோயில் சிதைந்தபின்ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.

பொருள் விளக்கம்
------------------------------
முப்பதும், முப்பதும், முப்பத்தாறும் தொண்ணுற்றாறு தத்துவங்கள். 
அவை _/|\_
ஆன்மத்துவம்-24,
நாடி-10, 
அவத்தை -5, 
மலம் -3, 
குணம் -3, 
மண்டலம் -3, 
பிணி -3, 
விகாரம் -8, 
ஆதாரம் -6, 
தாது -7, 
மரபு -10, 
கோசம் -5, 
வாயில் -9 
....................................
ஆக மொத்தம் -96
...................................
இந்த 96 தத்துவங்களும் செம்மையாக அமைந்த பாதுகாப்பு மதிலுடைய கோயிலுக்குள் வாழ்ப்வர், சிறப்பாகச் செய்யப்பட்ட பாதுகாப்பு மதிலுடைய அந்தக் கோயில் பாழடைந்து, பழுதடைந்து கெட்ட பிறகு, அந்தக் கோயிலுள் இருந்தவர்கள் அனைவரும் ஒருசேர ஓடிவிட்டார்கள். உயிர்போய் உடல் அழியத் தத்துவங்கள் தாமே நீங்கும் என்பது கருத்து. செப்ப- சிறப்பாக, செம்மையாக. மதிள்- மதில். சிதைதல் - கேட்டழிதல். ஓப்ப - ஒன்றாக.

Romanized
--------------
muppatum muppatum muppat taṟuvarum
ceppa matiḷuṭaik kōyiluḷ vāḻpavar
ceppa matiluṭaik kōyil citaintapiṉ
oppa aṉaivarum ōṭṭeṭut tārkaḷē.

Meaning-[The Body Temple Crumbled; the Ninty-Six Tattvas Fled]

----------------------------------------------------
The thirty and thirty and thirty-six they say,
They that behind temple walls safely dwelt,
They saw the temple walls crash and crumble,
And all alike, without a trace, thence did melt.