Pages

Saturday, February 2, 2013

[hymn 159] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

159

ஐந்து தலைப்பறி ஆறு சடையுள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்

பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து

வெந்து கிடந்தது மேலறி யோமே.


பொருள் விளக்கம்
------------------------------
ஐந்து தலைப் பறி- தலையில் உள்ள ஐந்து புலன்கள். ஆறு ஆதாரங்கள். சந்து- எலும்பு மூட்டுகள். சார்வு- சார்ந்த, பொருந்திய. பந்தல்-மேலாக போடப்பட்ட விதானம்.பந்தி- வரிசை. மனித உடலில் ஐம்புலன்கள், ஆறு ஆதார நிலைகள் உள்ளன. முப்பது எலும்பு மூட்டுகளும், அதன்மேல் சார்தப்பட்டுள்ள பதினெட்டு எலும்புகளும், ஒன்பது இந்திரியங்களும், வரிசையாக அமைந்த பதினைந்து எலும்புகளும் சேர்த்தமைத்த உடல் நெருப்பில் வெந்து கிடந்தது. ஆனால், அதற்குள் இருந்த உயிர் போனதெங்கே? தெரியவில்லையே!
Romanized
--------------

aintu talaippaṟi āṟu caṭaiyuḷa
cantavai muppatu cārvu patiṉeṭṭup

pantalum oṉpatu panti patiṉaintu

ventu kiṭantatu mēlaṟi yōmē.

Meaning-[Body is Burnt to Ashes Beyond That We Know Not]
----------------------------------------------------------------------
Five the segments of the head sixth plaits of hair,
Thirty the joints eighteen the sides,
Nine the roofs fifteen the rows, --
All to ashes burnt no more we know besides-- .