Pages

Monday, March 4, 2013

[hymn 177] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


இளமை நிலையாமை TRANSITORINESS OF YOUTH

177: 
கிழக்கெழுந்த் தோடிய ஞாயிறு மேற்கே

விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டும் தேறார் வியனுல கோரே.


பொழிப்புரை
-------------------
நாள்தோறும், கிழக்கில் அழகிதாய்த் தோன்றிப் பின் வானில் செல்லுகின்ற பேரொளியும் வெப்பமும் உடையதாய ஞாயிறு, பின்பு மேற்கில் வெப்பமும், ஒளியும் குறைந்து சாய்தலைக் கண் ணொளியில்லாத மக்கள் ஒளியில்லாத அக்கண்ணால் கண்டும் காணாதவராகின்றனர். அதுபோல, அகன்ற உலகில் அறிவில்லா திருக்கும் மக்கள், குழவியாய்ப் பிறந்த பசுக்கன்று அப்பொழுது துள்ளி ஆடிப் பின்பு சில நாளில் வளர்ந்து எருதாகி நன்கு உழுது, பின்னும் சில நாள்களுக்குப் பிறகு கிழமாய் எழமாட்டாது விழுதலைக் கண்ணாற் கண்டும், பிறந்த உடம்புகள் யாவும் இவ்வாறே இளமை நீங்கி முதுமை யுற்று விழும் என்பதை அறியாதவராகின்றனர்.

Romanized
--------------
kiḻakkeḻun tōṭiya ñāyiṟu mēṟkē

viḻakkaṇṭun tēṟār viḻiyilā māntar
kuḻakkaṉṟu mūtteru tāyccila nāḷil
viḻakkaṇṭun tēṟār viyaṉula kōrē.


Meaning-[ Rising Sun Sets; Glowing Youth Fades]
------------------------------------
They see the sun rises in the east and sets in the west,
Yet blind of eye, the truth they ne'er apprehend,
The tender calf grows, fattens for a while and dies;
But this wonder-pageant of the world they do not comprehend.