Pages

Friday, May 31, 2013

[hymn 199] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

7 MEAT EATING--FORBIDDEN

199:
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாருங் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றியத் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே.


குறிப்புரை
-------------
பொல்லாங்கு, கொலையால் வருவதாயும், கொலை செய்யத் தூண்டுவதாயும் இருத்தல். இது பற்றி அதனை உண்பாரை, `புலையர்` என்றார். புலையர் - கீழ்மக்கள்.
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை`` -குறள் 315
என்றவாறு, அருளில்லார், `அறிவுடையார்` எனப்படாமை யானும்,
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். -குறள் 252
என்பதனால் புலால் உண்பவர் அருளுடையாராதல் கூடாமை யானும் அவர் `உயர்ந்தோர்` எனப்படாது `இழிந்தோர்` எனவே படுவர் என்பது உணர்க. செல்லாக - சிதல்போல; சிதல் அரித்துத் தின்னும் இயல்புடையது. மறித்து - மீள ஒட்டாது மடக்கி.
உண்ணாமை உள்ள துயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு. -குறள் 255
எனத் திருவள்ளுவரும், `புலால் உண்பவர் நிரயம் புகுந்து மீளார்` என்றார். இரண்டிடத்தும், `மீளாமை` என்பதற்கு, `நெடுங்காலம் கிடத்தல்` என்பதே கருத்து என்க.

Romanized
------------
pollāp pulālai nukarum pulaiyarai
ellāruṅ kāṇa iyamaṉṟaṉ tūtuvar
cellākap paṟṟiyat tīvāy narakattil
mallākkat taḷḷi maṟittuvaip pārē.

Meaning-[Meat Eaters Will Have to Face Hell's Torments]
-----------------------------------------------------------------
The ignoble ones who base flesh do eat,
Death's agents bind them fast for all to see;
And push them quick into the fiery jaws of hell,
And fling them down there for ever to be.

reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"