Pages

Monday, September 16, 2013

[hymn 231] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

அந்தணர் ஒழுக்கம் - DHARMA OF ANTHANAN

231:
நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.




பொழிப்புரை
-------------
முப்புரிநூலை விடாது அணிகின்ற அந்தணர்களே, ஆராய்ந்து சொல்லின், நீவிர் கொண்டுள்ள முப்புரி நூலும், குடுமியுமே பிரமமாகிவிடுமோ! நூல் பஞ்சும், சிகை மயிருமேயாம். உண்மையைச் சொல்லுமிடத்து, நூலாவது வேதத்தின் ஞானகாண்டச் செய்யுட்களே. நுண்ணிய சிகையாவது, அச் செய்யுட்களின் பொருள் தெளிவே; இதனை அறிந்துகொள்ளுங்கள்.

Romanized
------------
nūluñ cikaiyum nuvaliṟ piramamō
nūlatu kārppāca nuṇcikai kēcamām
nūlatu vētāntam nuṇcikai ñāṉamām
nūluṭai antaṇar kāṇum nuvalilē.


reference:
http://www.thevaaram.org/